மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 November, 2021 8:40 AM IST

பட்டுப்புழு வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு மல்பெரிச் செடிக்கன்றுகள், களைக்கருவி, சொட்டுநீர் பாசனம் மற்றும் புழு வளர்ப்பு மையம் அமைக்க அரசு மானியம் வழங்குகிறது.

மல்பெரி சாகுபடி

விவசாயத்தின் சார்புத் தொழில்களில் பட்டுப்புழு வளர்ப்பும் முக்கியமானது.
இதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் 200 ஏக்கர் வரை மல்பெரி சாகுபடியும் பட்டுப்புழு வளர்ப்பு நடைபெறுகிறது.

அதிகரிக்கத் திட்டம் (Plan to increase)

சேடபட்டி, பேரையூரில் மட்டும் 30 விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு கூடுதலாக 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடியை அதிகரிக்க அரசுத் திட்டமிட்டுள்ளது. மல்பெரி செடியின் கன்று வாங்கி நடவு செய்தால் 3 மாதங்களில் செடி ஓரளவு வளர்ந்துவிடும். அதன்பின் பட்டுப்புழு மையம் அமைக்கலாம் என்கிறார் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கணபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மதுரை டி.ஆர்.டி.ஏ. வளாகத்தில் பட்டுவளர்ச்சி துறை செயல் படுகிறது.

ரூ.52,500 மானியம் (Rs.52,500 grant)

மல்பெரி செடி வளர்க்க ஏக்கருக்கு ரூ.10,500 வீதம் நடவு மானியம் அதிக பட்சமாக 5 ஏக்கர் வரையும் களைக்கருவி, மருந்து தெளிப்பான் பிற உபகரணங்கள் வாங்க ரூ.52,500 மானியம் வழங்கப்படுகிறது.ஆயிரம் சதுர அடியில் பட்டுப்புழு வளர்ப்பு மையம் அமைக்க ரூ.4 லட்சம் செலவாகும். இதற்கு ரூ.1.20 லட்சம் மானியம் கிடைக்கும்.

இதைத் தவிர சொட்டுநீர் பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை பாசன வசதி செய்வதற்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இலவசப் பயிற்சி (Free training)

பிற விவசாயம் செய்பவர்களும் மல்பெரி சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பை கற்றுக் கொள்ளும் வகையில் ஓசூர் அரசு பட்டு பயிற்சியில் 5 நாட்கள் இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இந்த வசதிகளை பயன்படுத்தி மதுரை மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு

பட்டுப்புழு வளர்க்க விரும்புபவர்கள் 83442 19425 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு மற்ற விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க...

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!

English Summary: Want to grow silkworms? Subsidy up to Rs. 52,500 to buy tools!
Published on: 16 November 2021, 08:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now