சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 4 December, 2020 11:39 AM IST
Want to set up a home garden? Horticulture sells fertilizers at subsidized prices!
Credit: Puthiyaseithi

வீட்டு தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்களை, மானிய விலையில் விற்பனை செய்யும் பணிகளை, தோட்டக்கலை துறை துவக்கியுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில், மாடி தோட்டம்,வீட்டு தோட்டம் அமைப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தோட்டக்கலை துறையால், உங்கள் வீட்டு தோட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது, மாநிலம் முழுதும் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி வீட்டில் தோட்டம் அமைத்தால், செடிகள் நன்றாக வளரும்.கோடை காலத்தில் அவற்றில் இருந்து காய்கறிகள், கீரைகள், மூலிகைகளை அறுவடை செய்து பயன்படுத்த முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு, வீட்டு தோட்டம் அமைப்பதற்கான இடு பொருட்கள் விற்பனையை, தோட்டக்கலை துறை துவக்கியுள்ளது. இதன் மொத்த விலை, 850 ரூபாய். மானிய விலையில், 510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Credit : Vikatan

இதில், 12 கிலோ எடையுள்ள, ஆறு தென்னை நார் கழிவு கட்டிகள், ஆறு செடி வளர்ப்பு பைகள், வேப்ப எண்ணெய், 'அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ்' ஆகிய உயிர் உரங்கள் (Bio-Fertilizers) இடம்பெற்று இருக்கும்.

கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், கொத்தவரை, தக்காளி, சுரைக்காய் உள்ளிட்ட, ஆறு வகையான காய்கறி விதை பாக்கெட்களும் இருக்கும். தோட்டம் அமைப்பதற்கான செயல் விளக்க கையேடும் வழங்கப்படுகிறது.

சென்னையில், மாதவரம் தோட்டக்கலை செயல் விளக்க பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, அண்ணாநகர் தோட்டக்கலை துறை டிப்போ ஆகியவற்றில் இடுபொருள் விற்பனை, துவக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை இடுபொருட்கள் மட்டுமின்றி, சாகுபடிக்கு தேவையான பூவாலி உள்ளிட்ட, சிறு கருவிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. பூந்தொட்டிகள், 8 ரூபாய் முதல், 190 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பூந்தொட்டிகளை வைப்பதற்கான தட்டுக்கள், 5 ரூபாய் முதல், 46 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரே இடத்தில் சாகுபடிக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதால், வீட்டு தோட்டம் அமைப்பவர்கள் அலைய தேவையில்லை.ஞாயிறு விடுமுறை தவிர, அனைத்து நாட்களிலும் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை விற்பனை நடக்கும்.

தகவல்
மகேந்திரகுமார்
துணை இயக்குனர்
தோட்டக்கலை துறை

மேலும் படிக்க...

புரெவி புயல் வலுவிழந்தது- தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!

TNAUவில் டிச.5ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி!

English Summary: Want to set up a home garden? Horticulture sells fertilizers at subsidized prices!
Published on: 04 December 2020, 11:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now