Horticulture

Sunday, 21 August 2022 07:40 AM , by: R. Balakrishnan

Sengandhal flower cultivation

பந்தலுார் வனத்தில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதியில் தமிழக மாநில மலரான செங்காந்தள் மலர்கள் அதிகளவில் பூத்துள்ளன.

செங்காந்தள் மலர்கள் (Sengandhal flower)

'குளோரிசா சூப்பர்பா' எனும் அறிவியல் பெயரை கொண்ட இந்த மலர்கள், கால் நுாற்றாண்டுக்கு முன்னர், தமிழகமெங்கும் வனம் மட்டுமின்றி, வனம் சார்ந்த வேளாண்மை, வேளாண்மை சாராத காடுகளில் பரவலாக காணப்பட்டது.

ஆண்டு முழுதும் இந்த மலரை காண முடியாது. இந்த மலர் ஏழு நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.செங்காந்தள் பூத்து தீக்கொழுந்து போல் காணப் படுவதால், 'அக்னி கலசம்' என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் மருத்துவ பயிராக, 7,000 ஏக்கருக்கு மேல் இது வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், அதிகமான வனத்தை உள்ளடக்கிய, நீலகிரியில் இயற்கையாக பூத்து அழிந்து வருகிறது.

சுயதொழில் (Self employment)

நீலகிரியில் பழங்குடியின மக்கள் சுயதொழிலாக இந்த வகை மலர்களை சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க

வறட்சியை தாங்கும் சுரைக்காய்: ஓராண்டில் நல்ல மகசூல்!

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா போலியா? கண்டறிவது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)