மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 August, 2021 6:02 AM IST

இந்திய உழவர் உரக்கூட்டுறவு (இப்கோ) நிறுவனத்தின் சார்பில் திரவ வடிவலான நானோ யூரியா உரம் ஈரோடுமாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நானோ யூரியா (Nano urea)

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த எண்ணமங்கலத்தில், நானோத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் நானோ யூரியாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் புதிய வகை யூரியாவை அறிமுகம் செய்துவைத்து, மக்காச்சோள வயலில் செயல்விளக்கத்தைப் ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனமான  இப்கோ  மூலம் நானோ தொழில்நுட்பத்தில் உலகின் முதல் நானோ உரமான  நானோ யூரியா தயாரிக்கப்பட்டுள்ளது.

500 மில்லி திரவம் (500 ml of fluid)

யூரியா உரத்திற்கு மாற்றாக இந்த நானோ யூரியாவைப் பயன்படுத்தலாம். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு மூட்டை (45 கிலோ) யூரியாவுக்குப் பதிலாக ரூ.240/- விலை கொண்ட வெறும் 500 மில்லி லிட்டர் திரவமே போதுமானது.

தழைச்சத்து (Nutrient)

அனைத்து வகையான பயிர்களுக்கும், யூரியா மேல் உரமிடுவதற்கு மாற்றாக இந்த திரவவடிவ நானோ யூரியாவை இலை மீது தெளிக்கலாம். இத்திரவம் இலை முதல் வேர் வரையிலும் சென்று பயிர்களுக்கு தழைச்சத்தை அளிக்கிறது.

அதிக மகசூல் (High yield)

ஒரு லிட்டர் தண்ணீரில் 4 மில்லி லிட்டர் நானோ யூரியா கலந்து தெளித்தால் போதுமானது. இதனால் மண் மற்றும் நீர் மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன் அதிக மகசூலும் கிடைக்க வழிவகைக்கிறது.

240 லிட்டர் (240 liters)

ஈரோடு மாவட்டத்திற்கு முதல் தவணையாக யூரியா 240 லிட்டர் நானோ யூரியா வரப்பெற்று உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இப்கோ (Ipco)

இந்த செயல்விளக்க நிகழ்ச்சியில் ' இப்கோ ' கள அலுவலர் வினோத், அந்தியூர் வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகேயன், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு எம்.தமிழ்செல்வன், அந்தியூர் வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார், 'அட்மா' திட்ட அந்தியூர் வட்டார தலைவர் கிருஷ்ணமூர்த்தி மைராடா ' வேளாண் அறிவியல் நிலைய யூச்சியியல் வல்லுநர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுவாக பயிர்களுக்கு பயன்படுத்தும் யூரியாவிற்கு மாற்றாக இந்த திரவ யூரியாவைப் பயன்படுத்தி விவசாயிகள் பயனடையலாம்.

மேலும் படிக்க...

PMKMY-விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியத் திட்டம் - உங்கள் பெயரைப் பதிவு செய்வது எப்படி?

PMJDY: பல்வேறு நன்மைகளுடன் ரூ. 2 லட்சம் காப்பீடு தரும் ஜன் தன் கணக்கு திட்டம்!!

English Summary: World's first nano urea-introduced in Erode district!
Published on: 10 August 2021, 09:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now