நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 August, 2023 4:32 PM IST
10th pass can get training and Central Govt certification in many professions and job opportunity!

திறன் மேம்பாடு ஒரு மாறும் மற்றும் போட்டித் திறன் கொண்ட தொழில்முறை உலகில் நம்மை, முற்றிலும் வெறுப்படுத்திக் காட்டவும், வாய்ப்புகளை பயன்படுத்தவும் உதவியாக அமையும், அதே நேரம், மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பும் பெறலாம்.

கிண்டி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 31.08.2023 வரை நேரடி மாணவர் சேர்க்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் நேரடி சேர்க்கை குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த முழுமையான தகவல் இப்பதிவில் பார்க்கலாம்.

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டியில் உள்ள Desktop Publishing Operator, Digital Photographer, Food Production (General), Food and Beverage Service Assistant, Smartphone Technician cum App Tester, Industry 4.0 வின் கீழ் New age courses- Advanced Computer Numerical Control Technician (CNC), Basic Design and Virtual verifier, Manufacturing Process Control and Automation, Industrial Robotics & Digital Manufacturing ஆகிய தொழிற் பிரிவுகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக 2023 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது, இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரவிரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் 31.08.2023 ஆம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயற்சி, விலையில்லா சீருடை மாதாந்திர உதவித் தொகை ரூ.750 மற்றும் விலையில்லா வரைபடக்கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும், மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கை உதவிமையத்தை நேரில் அனுகலாம், தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசிஎண், 044 -22501350.

மேலும் படிக்க: நகர்புற விவசாயம் செய்ய 40பேருக்கு மாஸ்டர் டிரேய்னரிங் அளிக்கப்படுகிறது: இன்றே விண்ணப்பிக்கவும்!

மீண்டும், திறன் மேம்பாடு என்பது இன்றைய வேகமாக வளர்ந்து வரும் தொழில்முறை உலகில் தொழில் வெற்றிக்கான ஒரு மூலக்கல்லாகும். தொழில்கள் நிலையான மாற்றத்திற்கு உட்பட்டு வருவதால், பலதரப்பட்ட திறன்களை மேம்படுத்திக்கொள்வது நம்மை தனித்துவமாக காட்ட உதவும். அதே நேரம், இத்திட்டம், மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றும் ஓர் வாய்ப்பாகவும் அமையும், அதே நேரம் சமீபத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதுமையான வழி வழங்கும் என்பது குறிப்பிடதக்கது. எனவே, நிச்சயம் இது உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.

மேலும் படிக்க:

வீட்டு கொல்லைப்புறத்தில் கோழி வளர்க்க சரியான தேர்வு: வெற்றிக் கண்டுள்ளார் மாம்பழ விவசாயி

இந்திய மீன் வளர்ப்பு முறையில் நார்வே நவீனம் பயனளிக்குமா?

English Summary: 10th pass can get training and Central Govt certification in many professions and job opportunity!
Published on: 23 August 2023, 04:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now