மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 January, 2022 6:59 AM IST

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 2012ம் ஆண்டு இறந்தவருக்கு, 2019ம் ஆண்டு, 1.20 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக, முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது.

சேலம் மாவட்டம், இடைப்பாடி, வெள்ளரிவெள்ளியில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயக் கடன் வழங்கியதில், கடந்த 2016, 2021ல், அரசு தள்ளுபடி செய்த கடன்களில் முறைகேடு நடந்துள்ளதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இறந்தவரின் பெயரில் கடன் வழங்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

இறந்தவருக்கு சம்மன் (Summons to the deceased)

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வேட்டுவப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. வயது 58. சங்க உறுப்பினரான இவர், 2012 ஜனவரி 19ம் தேதி இறந்துவிட்டார். ஆனால் அவர், 2019ல் சங்கத்தில், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதைக் கட்ட அறிவுறுத்தியும், கூட்டுறவு சார்பதிவாளர் கடந்த டிசம்பர்,2ம் தேதி 'சம்மன்' அனுப்பியுள்ளார். ராமசாமியின் மகன் சித்துராஜ் அவர் முன் ஆஜராகி, தந்தை இறந்ததை தெரிவித்தார்.

அலட்சியத்தின் உச்சம்

மேலும், அவர் பெயரில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். இதனால், 2016, 2021ல், தள்ளுபடி செய்த விவசாய கடன்களை முழுமையாக விசாரித்து, முறைகேடான கடன்களை வசூலிக்குமாறு, சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாடிக்கை (Custom)

இறந்தவரின் பெயரில் கடன் வழங்கியதாகக் கணக்கு காட்டுவதும், சிலர் வாங்கியக் கடனைக் கட்டாமல் இருப்பதற்காக உயிருடன் இருப்பவரே, இறந்துவிட்டார் எனக் கூறி கணக்கை முடித்துவைப்பதும் வங்கிக்கடன் பிரிவுக்கு சகஜம்தானே.

மேலும் படிக்க...

வீரரோ, காளையோ ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி!

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை அறிவிப்பு!

English Summary: 1.20 lakh loan to a person who died 7 years ago
Published on: 12 January 2022, 06:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now