மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2021 3:19 PM IST
Covishield

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகாரம் பெற்று பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு,  ஐரோப்பிய யூனியனின் பிற நாடுகளுக்கு பயணம் செய்வதில்  சிக்கல் ஏற்படாது. ஐரோப்பிய நாடுகளுக்குள் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறையை பயன்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கிரீன் பாஸ் சான்றிதழ் உடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சிக்கல் இல்லாமல் பயணிக்கலாம்.

கிரீன் பாஸ் வழங்குவதற்கான கொரோனா தடுப்பூசிகளின் வரிசைகளில் அஸ்ட்ரா செனகா தயாரித்துள்ள பிற  தடுப்பூசியின் பெயரும் இடம் பெற்றிருந்த போதிலும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பெயர் இடம்பெறாததால்,  ஐரோப்பிய நாடுகளுக்குச பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் கொடுக்க, முன்னதாக  பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது பிரான்ஸ் அரசும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்க முடிவு எடுத்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசியான கோவிஷீல்ட் செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகளை அனுமதிக்கும் 16 வது ஐரோப்பிய நாடாக பிரான்ஸ், ஜூலை 17, 2021 அன்று இதற்கு அளித்தது என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவல்லா ட்விட்டரில் பதிவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இப்போது 16 ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது உண்மையில் ஒரு நல்ல செய்தி என்று பூனவல்லா கூறினார்.

மேலும் படிக்க:

பள்ளிகள் திறப்பு: ஸ்டாலின் அறிவிப்பு!!

முட்டையில் இருக்கும் சூப்பர் சத்துக்கள் என்ன தெரியுமா?

நெல் கொள்முதலில் பல கோடி ரூபாய் முறைகேடு- விசாரணை நடத்தக் கோரிக்கை!

English Summary: 16 European countries allowed to get cow shield vaccine !!
Published on: 19 July 2021, 03:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now