Others

Sunday, 17 April 2022 02:53 PM , by: R. Balakrishnan

169 years since the launch of train service

நாட்டில் ரெயில் சேவை தொடங்கி 169-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவில் கடந்த 1853-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி 3.35 மணிக்கு இரயில் சேவையை முதன் முறையாக மும்பை தெற்கில் உள்ள போரி பந்தர்- தானே இடையே பிரிட்டிஷ் அரசு தொடங்கி வைத்தது. 14 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 400 பேர் பயணம் செய்தனர்.

இரயில் சேவை (Train Service)

தற்போது நாட்டின் மிகப்பெரிய பொது போக்குவரத்தாக இரயில் சேவை மாறி உள்ளது. இந்தியாவின் முதல் இரயில் சேவை தொடங்கப்பட்டு 169-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் தானே மாவட்ட இரயில் பயணிகள் சங்கம் சார்பில் தானே ரெயில் நிலையம் அருகே கொண்டாட்டம் நடத்தினர். இதில் தானே எம்.எல்.ஏ சஞ்சய் கேல்கர் மற்றும் பா.ஜனதா எம்.எல்.சி நிரஞ்சன் தவ்கரே ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீராவி இரயில் (Steam train)

1852ம் ஆண்டு நவம்பர் மாதம் நீராவி என்ஜின் கொண்ட பயணிகள் ரயில் இந்தியாவில் முதன் முதலாக சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது. அதன் பிறகு 1853ம் ஆண்டில் ஏப்ரல் 16ல் அதிகாரப்பூர்வமாக நீராவி என்ஜின் கொண்ட பயணிகள் இரயில் இயக்கப்பட்டது.

1856ல் ராயபுரம்-வாலாஜா

1856ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி ராயபுரத்தில் இருந்து வாலாஜா நகர்(ஆர்காட்) வரை முதன் முதலாக ரயில் இயக்கப்பட்டது. பெங்களூர் பகுதி 1864ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்பட்டது.

மேலும் படிக்க

வாகனங்களில் முழு டேங்க் வரை பெட்ரோல் நிரப்பலாமா?

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள்: 4-வது இடத்தில் இந்தியா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)