மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 October, 2019 11:41 AM IST

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக நேற்று தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்தது மற்றும் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் வெளுத்து வாங்கியது.

இதனிடையே தென் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் மற்றும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கன்னியாகுமரி முதல் கோவா வரை ஏற்பட்டுள்ள காற்றின் திசை மாறுபாடு காரணமாக வடக்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இடி தாக்கி 2 பேர் பாலி 

சிவகங்கை மாவட்டம் கோவானுர் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த 51 வயது முதியவர் மயில்சாமி இடிதாக்கி உயிர் இழந்தார். இதே போல் தாளவாசலை சேர்ந்த சபரிமுத்து ராஜன் என்பவர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடி தாக்கி உயிர் இழந்தார்.

முன்னாள் இயக்குனர் ரமணன் அறிவிப்பு

நடப்பாண்டில் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை இயல்பான நிலையில் இருக்கும் என முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 20 ஆம் தேதி பருவ மழை துவங்கும் சாத்திய கூறுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை பொறுத்தே மழையின் அளவு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: 2 People Died By Thunder Attack: Heavy rains With thunderstorm in southern coastal Districts, Tamil Nadu
Published on: 07 October 2019, 11:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now