பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 October, 2022 9:35 AM IST

மத்திய அரசைத் தொடர்ந்து, தனது அரசு ஊழியர்களுக்கும், 4 சதவீத அகவிலைப்படி உயர்வை இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் அகவிலைப்படிக்கு ஏற்ப டிஏ உயர்த்தவேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில்,
ராஜஸ்தான் மாநில அரசும், டெல்லி மாநில அரசும் அடுத்தடுத்து, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு தங்கள் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தனர். ஏனெனில் அவர்களது அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.

தமிழகம்

அதனை அடுத்து, இந்த டி.ஏ உயர்வை, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் வராத நிலையில், வேறு ஒரு மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

ஜார்கண்ட் அரசு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு ஏற்ப, தனது ஊழியர்களுக்கான டிஏவையும் ஜார்கண்ட் மாநில அரசு உயர்த்தியுள்ளது.
இதன்படி ஜார்க்கண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அகவிலைப்படியில்  4 சதவீதம் உயர்வு கிடைக்கும். மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி  மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை  நான்கு சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஜார்கண்ட் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு அறிவிப்பு

ஜார்கண்ட் மாநில அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடந்தது. “மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்போதுள்ள 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்று அமைச்சரவை செயலர் வந்தனா தாடெல் கூறினார்.

இதேபோல், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை தற்போதுள்ள 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தவும் அமைச்சரவை முடிவு செய்தது என்று அவர் மேலும் கூறினார். இதன் மூலம் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 1.35 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

மேலும் படிக்க...

ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!

ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!

English Summary: 38% hike in govt employees' gratuity!
Published on: 12 October 2022, 09:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now