Others

Friday, 21 October 2022 10:17 PM , by: Elavarse Sivakumar

இந்த மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அரசு ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அகவிலைப்படி உயர்வுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜூலை முதல்

இதன் படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தர் அறிவித்துள்ளார். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இம்மாத சம்பளத்துடன்

உயர்த்தப்பட்ட அகவிலைப்படித் தொகை அக்டோபர் மாதம் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முந்தைய மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை நவம்பர் மாதத்தில் வழங்கப்படவிருக்கிறது. ஹரியானா மாநில நிதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன.

மற்ற மாநில அரசுகள்

சமீபத்தில்தான் உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து தற்போது ஹரியானா மாநிலத்திலும் உயர்ந்துள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக இந்த அறிவிப்பு வந்திருப்பது ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)