நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 August, 2022 9:58 AM IST
4G Charges to Raise again

5ஜி இணைப்புக்கான கட்டணத்திற்கு பெரிதளவு வித்தியாசம் இல்லாத வகையில் 4ஜி கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களை 5ஜி சேவைக்கு மாற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் அன்று, ‛5ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் முடிவு பெற்றதை அடுத்து, அடுத்தகட்டமாக, தொலைதொடர்பு நிறுவனங்கள், கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கும் என, தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

5ஜி ஏலம் (5G Auction)

5ஜி கட்டணம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம், 1.5 லட்சம் கோடி ரூபாயுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஏலம் எடுப்பதற்காக ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவிலான தொகையை செலவு செய்துள்ளன. இதன் காரணமாக, அந்த செலவை ஈடுகட்டும் விதமாக, தொலைபேசி மற்றும் பிராட்பேண்டு சேவைகளுக்கான கட்டணத்தை, மீண்டும் ஒருமுறை நிறுவனங்கள் அதிகரிக்க கூடும். அடுத்து, 4ஜி சேவைக்கும் 5ஜி சேவைக்கும் இடையே கட்டணத்தில் வித்தியாசம் அதிகம் இருப்பின், வாடிக்கையாளர்களை ஈர்ப்பது சிரமமாக இருக்கும்.

இதனால், தற்போது சேவையில் இருக்கும் 4ஜி இணைப்புக்கான கட்டணத்தை அதிகரிக்க நிறுவனங்கள் முயற்சிக்கும். பெரிய அளவில் கட்டண வித்தியாசம் இல்லை எனும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் 5ஜி சேவைக்கு மாற முன்வருவர்.

4ஜி கட்டண உயர்வு (4G Charges Hike)

கட்டண உயர்வை பொறுத்தவரை, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நான்கு சதவீத உயர்வை நிறுவனங்கள் அறிவிக்க கூடும் அல்லது, நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி., / 4ஜி இணைப்புக்கான கட்டணத்தில், 30 சதவீத உயர்வை அறிவிக்க கூடும். நிறுவனங்களை பொறுத்து, கட்டண உயர்வு குறித்த முடிவுகள் வேறுபடக்கூடும். ஆனால், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

டிசம்பரில் 5G சேவை: பிரதமர் மோடி திட்டம்!

வரப்போகுது ஹைட்ரஜன் ஸ்கூட்டர்: புது முயற்சியில் டிவிஎஸ்!

English Summary: 4G charges to rise again: Here's the reason!
Published on: 03 August 2022, 09:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now