Others

Saturday, 11 June 2022 01:30 PM , by: Elavarse Sivakumar

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடுத்தமாதம் 5 சதவீதம் உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளம் இன்னும் அதிகரிக்கப்படும்.

அகவிலைப்படி 

அகவிலைப்படி உயர்வு என்பது அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அளவைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது. 2022 மார்ச் மாதத்தில் இந்தக் குறியீட்டில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 5 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயரும். அப்போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 27,000க்கு மேல் உயரலாம்.

ஏஐசிபிஐ குறியீடு

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஏஐசிபிஐ குறியீடு சரிவைக் கண்டது. ஆனால் அதன் பிறகு ஏஐசிபிஐ புள்ளி விவரங்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரியில் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் அதிகரித்தது.

இப்போது ஏப்ரல் மாதத்தின் புள்ளி விவரங்களும் வெளிவந்துள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆகக் குறைந்துள்ளது. எனவே மே மற்றும் ஜூன் மாத தரவு 127ஐ தாண்டினால், அகவிலைப்படி 5 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

அதிகபட்ச சம்பளம்

அடிப்படை சம்பளம் - ரூ.56,900
புதிய அகவிலைப்படி (39%) - ரூ.22,191/மாதம்

அகவிலைப்படி இதுவரை (34%) - ரூ.19,346/மாதம்

எவ்வளவு உயரும்?

21,622-19,346 = ரூ.2,845/மாதம் அதிகரிக்கும்
ஆண்டு ஊதிய உயர்வு 2,845X12 = ரூ.34,140

குறைந்தபட்ச சம்பளம்

அடிப்படை சம்பளம் - ரூ.18,000

புதிய அகவிலைப்படி (39%) - ரூ.7,020/மாதம்

அகவிலைப்படி இதுவரை (34%) - ரூ.6120/மாதம்

எவ்வளவு உயரும்? 7020-6120 = ரூ.900/மாதம்

5. ஆண்டு ஊதிய உயர்வு 900 X 12 = ரூ.10,800

மேலும் படிக்க...

சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு!

34 மாணவர்கள் தற்கொலை - விரக்தியின் உச்சக்கட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)