Others

Thursday, 10 February 2022 05:04 PM , by: Elavarse Sivakumar

ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 6 ஆண்டுகள், தன் கழுத்தில் சிக்கிக்கொண்ட டயருடன் ஒரு முதலை உயிர்வாழ்ந்திருக்கிறது. அடக் கொடுமையே எனப் புலம்புபவர்கள் இந்த முதலையைக் காண விரும்பினால், இந்தோனேஷியாவிற்குத்  நிச்சயம்போக வேண்டும். இந்தோனேஷியாவில் கழுத்தில் சிக்கிக் கொண்ட டயருடன் அவதிப்பட்ட முதலையிடம் இருந்து வெற்றிகரமான டயர் எடுக்கப்பட்டது.

பலூ நகரத்தில் உள்ள ஆற்றில் இருந்த முதலை ஒன்று இருசக்கர வாகனத்தின் டயர் கழுத்தில் சிக்கி அவதிப்பட்டு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக சிக்கியிருந்த அந்தத் டயரை அகற்ற எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளும் தோல்வியடைந்தன.

டயரை அகற்றுபவர்களுக்கு ரொக்கம் பரிசாக வழங்கப்படும் என பலூ நகர நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து பலர் முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் டிலி என்பவர் சுமார் 3 வாரங்கள் முயற்சி செய்த பின் முதலையைப் பிடித்து அதன் கழுத்தில் இருந்த டயரை அகற்றியுள்ளார்.

6 ஆண்டுகளாகப் பட்டு வந்த அவதியில் இருந்துத் தப்பித்திருப்பதால், இந்த முதலை தற்போது நிம்மதி அடைந்திருக்கிறது. பிரச்னையில் இருந்து விடுதலை பெற்றால், மனிதர்களானாலும் சரி, விலங்குளானாலும் சரி, அந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை

மேலும் படிக்க...

இனிமேல் வார சம்பளம்! ஊழியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி!!

அச்சதலான 10 அடி தோசை - சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)