Others

Thursday, 29 September 2022 11:31 AM , by: Elavarse Sivakumar

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நவராத்திரி, பூஜை, தீபாவளி என பண்டிகைக்காலம் நெருங்கிவிட்டது. எனவே ரயில்வே ஊழியர்கள் இந்தாண்டு போனஸ் தொகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு ஆயுத பூஜைக்கு முன்பாக போனஸ் பற்றிய அறிவிப்பு வெளியாவது வழக்கம்.

அமைச்சரவை ஒப்புதல்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.2,000 கோடி

இதனால் சுமார் 11 லட்சம் அரசிதழ் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். மேலும், போனஸ் தொகை வழங்குவதற்காக இந்திய ரயில்வேக்கு கூடுதலாக 2000 கோடி ரூபாய் செலவாகும்.

கடந்த ஆண்டிலும் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை- தமிழக அரசு அதிரடி!

18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)