நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 January, 2022 5:00 PM IST
7th Pay Commission: 23.29% pay rise for government employees, retirement age 62

ஆந்திரப் பிரதேச அரசு தனது ஊழியர்களுக்கு இரட்டை நற்செய்தியை வழங்கியுள்ளது. புத்தாண்டில் ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கி, ஓய்வு பெறும் வயது மற்றும் சம்பளம் இரண்டையும் மாநில அரசு உயர்த்தியுள்ளது. சம்பளம் 23.29% உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் ஓய்வு பெறும் வயது 60லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழிற்சங்கத்துடன் சந்திப்பு(Meeting with the union)

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு பிரதிநிதிகளுடன் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது உயர்த்தப்பட்ட சம்பளத்தின் பலனை அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என முதல்வர் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், ஊழியர்களின் இதர பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஊழியர்களுக்கு எப்போது பணம் கிடைக்கும்(When employees get paid)

இந்த மாற்றம் ஜூலை 1, 2018 முதல் அமலுக்கு வரும், அதே நேரத்தில் அதனுடன் தொடர்புடைய பொருளாதார பலன்கள் ஏப்ரல் 1, 2020 முதல் வழங்கப்படும். அதேநேரம், உயர்த்தப்பட்ட சம்பளத்துடன், ஜனவரி முதல் புதிய சம்பளம் கிடைக்கும். அதாவது, ஊழியர்களின் சம்பளம் பம்பரமாக உயர்த்தப்பட உள்ளது. இந்த முடிவால் ஆண்டுக்கு ரூ.10,247 கோடி கூடுதல் நிதிச்சுமை கருவூலத்துக்கு ஏற்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள டிஏவும் வழங்கப்படும்(Outstanding DA will also be provided)

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, நிலுவையில் உள்ள அகவிலைப்படியும் (டிஏ) ஜனவரி மாதச் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு முதல்வர் தெரிவித்தார். இதனுடன், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, விடுப்பு பணம் மற்றும் நிலுவையில் உள்ள பிற கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக தீர்க்கப்படும். அதாவது, இந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பல பிரச்னைகளுக்கு அரசு தீர்வு கண்டது.

ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு செய்யப்படும்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து, அமைச்சரவையின் துணைக் குழு பரிசீலித்து வருவதாகவும், ஜூன் 30ஆம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். ஊழியர்களின் சுகாதாரத் திட்டம் தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண, தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார். அதாவது, அரசாங்கம் இப்போது தனது ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சனைகளில் கடுமையாகப் பார்க்கிறது.

மேலும் படிக்க:

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பள உயர்வு -நிதித் துறை இணையமைச்சர்

English Summary: 7th Pay Commission: 23.29% pay rise for government employees, retirement age 62
Published on: 12 January 2022, 05:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now