Others

Tuesday, 09 August 2022 07:36 PM , by: Elavarse Sivakumar

மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய ஊதிய விதிதத்தைப் பரிந்துரை செய்யும், 8-வது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலோவன்சஸ் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், கமிஷனுக்கு பதிலாக பதவி உயர்வு விதிகளை மாற்றப்பட உள்ளதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

7-வது ஊதிய குழு

7-வது ஊதிய குழுவிற்கு பிறகு தங்களுக்கு குறைவான சம்பளமே கிடைக்கப்பெறுவதாக மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதனால் மத்திய அரசு ஊழியர்கள் 8-வது ஊதிய குழுவிற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியும் 8வது ஊதியக்குழு குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

புதிய அறிவிப்புகள்

அதன்படி 8வது ஊதியக்குழுவை கொண்டு வருவதற்கு அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலோவன்சஸ் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை.

அமைச்சர் விளக்கம்

இந்நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் கூறுகையில், ஊதிய மேட்ரிக்ஸில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்க வேண்டும் என்றும் இதற்கு அடுத்த ஊதியம் தேவையில்லை என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களின் தேவைக்கேற்ப தீர்மானிக்கப்பட வேண்டிய அக்ராய்டு ஃபார்முலாக்களின் அடிப்படையில் அதை மதிப்பாய்வு செய்து திருத்தலாம், அதாவது பதவி உயர்வு விதிகளை அரசு மாற்றலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம்?

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)