நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 September, 2022 7:59 PM IST
Aadhar card for Vinayakar

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது, விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இதனை தொடர்ந்து சில நாட்களில் சிலையை நீர்நிலைகளில் பாதுகாப்புடன் கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

ஆதார் அட்டையில் விநாயகர் (Vinayakar in Aadhar Card)

ஜார்க்கண்டில் ஜாம்ஷெட்பூர் நகரில் முகவரி மற்றும் பிறந்த நாளுடன் கூடிய ஆதார் அட்டை வடிவில் வைக்கப்பட்ட விநாயகரின் பந்தல் ஒன்று காண்போரை கவர்ந்து வருகிறது. அந்த அட்டையில், விநாயகர் உருவம் இடம் பெற்று உள்ளது.

அதன் பக்கத்தில், பார்கோடு ஒன்று உள்ளது. அதனை ஸ்கேனிங் செய்தபோது, கூகுள் இணைப்புக்கு செல்கிறது. அந்த இணைப்பில் பல்வேறு வடிவிலான விநாயகரின் புகைப்படங்கள் திரையில் தோன்றுகின்றன.

அந்த பந்தலில், விநாயகரின் முகவரியும் இடம் பெற்று உள்ளது. இதன்படி, தந்தை மகாதேவர் என்றும் கைலாச பர்வதம், மேல் தளம், மானசரோவர் ஏரி அருகே, கைலாசம், அஞ்சல் எண் - 000001 என குறிப்பிடப்பட்டு உள்ளது. அவரது பிறந்த ஆண்டு 6-ம் நூற்றாண்டு, ஜனவரி 1-ந்தேதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விநாயகர் பந்தலை அமைத்த சரவ் குமார் கூறும்போது, ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணம். அதனை வாங்காதவர்கள் அனைவரும் வாங்க வேண்டும் என்ற செய்தியை பகிரும் முயற்சியாக இந்த பந்தலை அமைத்துள்ளேன் என கூறியுள்ளார். விநாயகர் பந்தலால் கவரப்பட்ட பலரும் புகைப்படங்களை எடுத்து கொண்டதுடன், செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

மேலும் படிக்க

விநாயகர் சிலை ஊர்வலம்: ஐகோர்ட் விதித்த கட்டுப்பாடுகள்!

முழுமுதற் கடவுள் பிள்ளையார்: விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடுகிறோம்?

English Summary: Aadhaar card for Vinayakar: Pandhal that attracted people!
Published on: 02 September 2022, 07:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now