மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 September, 2019 11:09 AM IST

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் அதிக இருக்கும் மற்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு தீபகற்ப பகுதியில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள் தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்  என்றும்  நேற்றைய அறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக் கடலில் உருவாகிய நிலையில் அது சென்னைக்கு அருகே அரபிக் கடல் பகுதிக்கு சென்றடைந்தது. இதன் காரணமாகவே கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. மேலும் ஓர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் நல்ல மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே வங்கக் கடலில் மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி சென்னைக்கு கீழே வருகிற 23 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் 24, 25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. 

குறிப்பாக சேலம், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. 

இதனிடையே தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிக பட்ச மழை பொழிவாக திருவள்ளூரில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல்லில் பலத்த மழை பெய்ததால்,  பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Atmospheric overlap is prevalent in Southern Andhra pradesh And Northern Tamil Nadu: Rainfall of Next three days In 14 districts
Published on: 21 September 2019, 11:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now