மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 June, 2022 7:34 PM IST
Green House

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற வங்கி பணியாளர் ஆயிரம் செடிகளுடன் மாசுபாடு இல்லாத பசுமை இல்லம் ஒன்றை உருவாக்கி உள்ளார். லக்னோ, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் ஷாகஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் சர்மா. வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஆனால், பணி ஓய்வுக்கு பின் அவர் மேற்கொண்ட முயற்சி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவர் 6,300 சதுர அடி பரப்பளவில் 400 வகையான ஆயிரம் செடி, கொடிகளை வளர்த்து வருகிறார். பூக்கள், கனிகள் காய்த்து குலுங்குகின்றன.

பசுமை இல்லம் (Green House)

300 ஆண்டுகள் பழமையான அவரது வீடு, மாசுபாடு இல்லாத, பசுமை இல்லம் ஆக உருவாகி உள்ளது. இதனால் கவரப்பட்ட அக்கம் பக்கம் வசிப்பவர்கள் உள்ளிட்ட உள்ளூர்வாசிகள் பலர் இவரது வீட்டுக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். ஜப்பான், ஜெர்மனி மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறும்போது, மாசுபாடு இல்லாத ஒரு பசுமை இல்லம் உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதற்காக 40 ஆண்டுகளாக திட்டங்களை சேகரித்து வந்தேன். தற்போது மொத்தம் 400 வகையான செடிகள் உள்ளன. என்னுடைய வீட்டின் வெப்பநிலை, மற்ற வீடுகளில் உள்ள வெப்பநிலையை விட 5 டிகிரி குறைவாக இருக்கும். காற்று தர குறியீடும் வெளியிடங்களில் உள்ள அளவை விட நன்றாக உள்ளது.

அவரது பசுமை இல்லம் மாதிரியை நகர் முழுவதும் 50 வீடுகளில் அமைக்கவும் அவர் உதவியுள்ளார். செடி, கொடிகள் மற்றும் மரங்களை எனது குழந்தைகள் போன்று நேசிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். என்னுடைய வீட்டில் ஏறக்குறைய காலியாக கிடந்த அனைத்து பகுதிகளிலும் செடிகளை வளர்த்து வருகிறேன். என்னுடைய செடிகள் தற்போது பூக்க தொடங்கி உள்ளன. கனிகள் தருகின்றன. காய்கறிகளும் வளர்ந்து வருகின்றன என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

அதிக மகசூல் தரும் வியட்நாம் பலாப்பழம்: வீட்டிலேயே வளர்க்கலாம்!

கஞ்சா வளர்க்க இந்த நாட்டில் தடையில்லை: அதிரடி அறிவிப்பு!

English Summary: Bank employee sets up greenhouse to reduce heat!
Published on: 15 June 2022, 07:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now