Others

Monday, 18 April 2022 03:56 PM , by: R. Balakrishnan

Beautiful Furnitures in Weeds

முதுமலையில் 'லேன்டனா' களைச்செடிகளை பயன்படுத்தி, பழங்குடியின இளைஞர்கள், நாற்காலி உள்ளிட்ட 'பர்னிச்சர்' பொருட்களை தயாரித்து அசத்துகின்றனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அதிகரித்து வரும் 'லேன்டனா' போன்ற களைசெடிகளால், வன விலங்குகளுக்கான தீவனங்கள் அழிந்து வருகின்றன. இதை அவ்வப்போது அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர்.

ஃபர்னிச்சர் (Furniture)

இச்செடிகளை பயன்படுத்தி, தெப்பக்காடு பழங்குடி இளைஞர்கள் நாற்காலி, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். செடிகளை, சுடுநீரில் வேக வைத்து, அதன் தோலை நீக்கி, வெயிலில் காயவைத்து, பின் நாற்காலி, கட்டில், டிரஸ்ஸிங் சேர், சோபா உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கின்றனர்.

பழங்குடி இளைஞர் மாறன் கூறுகையில், ''15 ஆண்டுகளுக்கு முன் இப்பணியை துவங்கி இரண்டு ஆண்டுகள் தயாரித்தோம். ஐந்து ஆண்டுகளாக மீண்டும் தயாரித்து விற்கிறோம்; மிக உறுதியாகவும், நீண்ட காலம் பயன்படுத்த முடியும்,'' என்றார்.

மேலும் படிக்க

உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்: பிரதமர் மோடி!

நாட்டில் இரயில் சேவை துவக்கி 169 ஆண்டுகள் நிறைவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)