மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 July, 2022 3:15 PM IST
Beef Tweet: Chennai police involved in controversy

மாட்டுக்கறி என ட்விட்டரில் பதிவிட்டவரை கண்டிக்கும் சென்னை மாநகர காவல்துறை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அந்த ட்விட்டில் என்ன இருந்தது என்று பதிவில் காணுங்கள்.

நாட்டில் பல்வேறு இந்து அமைப்பினர் மாட்டிறைச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக ஆளும் சில மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டை எதிர்த்து பல்வேறு தரப்பினர் அவ்வப்போது மாட்டிறைச்சி உண்ணும்போது இணையத்தளத்தில் அதை புகைப்படம் எடுத்து பகிர்வதுண்டு.

அவ்வாறு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபுபக்கர் என்பவர் மாட்டிறைச்சி உணவை புகைப்படம் எடுத்து 'மாட்டு கறி' என ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவிற்கு, 'தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்' என்று சென்னை மாநகரக் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்திலிருந்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்த காரணமாக இருந்தது.

சென்னை காவல்துறையின் ட்விட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்த தர்மபுரி மக்களவை உறுபினர் செந்தில்குமார், இந்த ட்விட்டர் பக்கத்தை யார் கையாளுகிறார்கள். அந்த பதிவில் என்ன தப்பு இருக்கிறது. என்ன பதிவிட வேண்டும். என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல்துறை எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை" என்று பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ட்விட்டர் பிதிவை நீக்கிய சென்னை காவல்துறை, தாங்கள் பதிவிட்ட ட்வீட் சென்னை காவல் துறையின் பக்கத்தில் ரீட்வீட் செய்யபட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே, இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:

பலன் தரும் செடிகள்: நர்சரியில் பெறலாமே!

சரிவில் தங்கம் விலை- 2 நாட்களில் ரூ.1,064 குறைந்தது!

English Summary: Beef Tweet: Chennai police involved in controversy
Published on: 07 July 2022, 03:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now