Others

Wednesday, 14 December 2022 06:54 AM , by: R. Balakrishnan

Senior citizens

இந்தியாவில் சீனியர் சிட்டிசன்களின் நலனுக்காக நடத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை கேட்டு நாடாளுமன்றத்தில் ரமேஷ் சந்தர் கவுசிக், ராமா தேவி, திலேஷ்வர் கமைத், லாக்கெட் சாட்டர்ஜி, சுனில் குமார் பிண்டு ஆகிய எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், சீனியர் சிட்டிசன்களுக்கான நலத் திட்டங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனியர் சிட்டிசன்கள் (Senior citizens)

இந்தியாவில் 60 வயதை தொட்டவர்கள் சீனியர் சீட்டிசன்கள் (Senior Citizen) என அழைக்கப்படுகின்றனர். மேலும் 80 வயதை தொட்டவர்கள் மிகவும் சீனியர் சிட்டிசன்கள் (Very Senior Citizen) என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு சலுகைகள், திட்டங்கள் இருக்கின்றன.

அடல் வயோ அபியுதய் திட்டம் (AVYAY)

சீனியர் சிட்டிசன்களுக்காக மத்திய சமூக நீதி துறை அடல் வயோ அபியுதய் திட்டத்தை (AVYAY) அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம் (Integrated Programme for Senior Citizen), ராஷ்ட்ரிய வயோஸ்ரீ திட்டம் (Rashtriya Vayoshri Yojana) ஆகிய இரண்டு திட்டங்கள் இருக்கின்றன. இத்திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு காப்பகங்கள், தொடர் சேவை காப்பகங்கள் போன்றவற்றை பராமரிக்க நிதி வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கான காப்பகங்களில் தங்குமிடம், உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு ஆகிய வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ராஷ்ட்ரிய வயோஸ்ரீ திட்டம்

இத்திட்டத்தின் கீழ், வயது காரணமாக ஏற்பட்ட ஊனம், உடல் நலம் அல்லது மன நலம் குன்றுதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சக்கர நாற்காலி (Wheelchair), சிலிகான் ஃபோம் குஷன் (Silicon Foam Cushion), கைத்தடி (Walking Sticks), முழங்கை ஊன்றுகோல் (Elbow crutches), காது கேளாதவர்களுக்கான கருவி (Hearing aid) உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

வெள்ளி பொருளாதாரம்

SAGE (Seniorcare Ageing Growth Engine) இணையதளம் வாயிலாக, முதியோருக்கு தேவையான தீர்வுகளை கொண்டுவரும்படி தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளிகப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் வரை நிதி உதவி 49% பங்குகள் வடிவில் வழங்கப்படுகிறது.

இலவச எண்

பெற்றோர் மற்றும் முதியோருக்கான குறைகளை கேட்டு தீர்வு காணுவதற்காக 14567 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த இலவச எண்ணை தொடர்புகொண்டு சீனியர் சிட்டிசன்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

பென்சன் (Pension)

இந்திரா காந்தி தேசிய முதியோர் பென்சன் திட்டத்தின் கீழ், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களை சேர்ந்த 60 முதல் 79 வயது வரையிலானவர்களுக்கு மாதம் 200 ரூபாய் பென்சன் வழங்கப்படுகிறது. 80 வயதை தொட்டவர்களுக்கு மாதம் 500 ரூபாய் பென்சன் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம் வராது: மௌனம் கலைத்தது மத்திய அரசு!

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: அகவிலைப்படி நிலுவைத்தொகை விரைவில் வரப்போகுது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)