மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 September, 2021 1:43 PM IST
Pan Card Fine

தற்போது நாட்டில் ஏறக்குறைய அனைவரும் பான் கார்டைப் உபயோகித்து வருகிறார்கள். இப்போது அதை சாதாரண குடிமக்களுக்கு முக்கிய ஆவணமாகும். இத்தகைய சூழ்நிலையில், வங்கி உட்பட பல இடங்களில் பான் அட்டை தேவை இருக்கிறது. ஆனால் பான் அட்டை பயன்படுத்தும் போது நீங்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏனெனில் நீங்கள் தவறுதலாக PAN தொடர்பான ஏதேனும் தகவலை வழங்கி இருந்தால், நீங்கள் ரூ 10000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். பத்து இலக்க பான் எண்ணை மிகவும் கவனமாக நிரப்ப வேண்டும். இதில் ஏதாவது எழுத்து பிழை இருந்தால் நீங்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள். இது தவிர, நீங்கள் இரண்டு பான் கார்டுகளைப் பயன்படுத்தினால், அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே பான் அட்டை குறித்து எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

இல்லையென்றால், வருமான வரித்துறை உங்கள் பான் கார்டை பெரிய அபராதத்துடன் ரத்து செய்யலாம். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால், உங்கள் வங்கிக் கணக்கை முடக்கலாம். உங்களிடம் இரண்டு பான் கார்டு இருந்தால் உடனடியாக வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து விடவேண்டும்.

வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 272B இன் கீழ், தவறான பான் கார்டு தகவலைக் கொடுப்பவருக்கு ரூ. 10,000 அபராதம் வருமான வரித்துறை விதிக்கலாம். ஐடிஆர் படிவத்தை நிரப்பும்போது அல்லது பான் கார்டு விவரங்களை உள்ளிட வேண்டிய பிற சந்தர்ப்பங்களில் இந்த விதிமுறை அடங்கும்.

உங்களிடம் இரண்டு பான் கார்டுகளும் உள்ளதா?Do you have two Pan cards?

சில சமயங்களில் மக்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​அந்த பான் கார்டு அவர்களுக்கு கிடைக்காதபட்சத்தில் அல்லது அதுக்குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத போது, அவர்கள் மற்றொரு PAN கார்டுக்கு விண்ணப்பிப்பது உண்டு. அத்தகைய சூழ்நிலையில், இரண்டு கார்டு அவர்களிடம் வந்து விடுகிறது. அதுவும் ஒரு பெயர், ஒரே முகவரியில் இருக்கிறது. ஆனால் இரண்டு அட்டையிலும் பான் எண் வேறுபட்டவையாக இருக்கும். ஆகையால் வருமான வரித்துறையை பொறுத்த வரை இது ஒரு பெரிய குற்றமாகும்.

2 பான் கார்டுகளை வைத்திருந்தால் 10 ஆயிரம் அபராதம்(10 thousand fine for possession of 2 Pan cards)

வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 272B இன் கீழ், உங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் இருக்கலாம். எனவே ஒருவருடைய பெயரில் இரண்டு பான் கார்டு இருந்தால், அவர் ஒரு அட்டையை வருமான துறைக்குத் திருப்பித் தர வேண்டும்.

பான் கார்டை எப்படி திருப்பிச் செலுத்துவது?How to refund a Pan card?

இரண்டாவது பான் கார்டை திருப்பித் தர ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் இரண்டையும் பின்பற்ற முடியும். பான் அட்டையை திருப்பி அனுப்ப பொதுவான படிவங்கள் உள்ளன. இதை வருமான வரி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இணையதளத்தில் உள்ள புதிய PAN அட்டைக்கான கோரிக்கை அல்லது PAN தரவு இணைப்பில் மாற்றங்கள் அல்லது திருத்தம் ஆகியவற்றை தேர்வு செய்தால் படிவம் பதிவிறக்கம் செய்யப்படும். இதன் பிறகு படிவத்தை பூர்த்தி செய்து எந்த NSDL அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். இரண்டாவது பான் கார்டை ஒப்படைக்கும் போது, ​​அதை படிவத்துடன் சமர்ப்பிக்கவும். இது ஆன்லைனிலும் செய்ய முடியும்.

மேலும் படிக்க:

செப்டம்பர் 30 க்கு முன் இதை செய்ய வேண்டும்! இல்லையெனில் பான் கார்டு செல்லுபடியாகாது!

இறந்தவர்களின் ஆதார்-பான், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை என்ன செய்வது?

English Summary: Beware: For pan Card Users Rs. 10000 fine!
Published on: 16 September 2021, 01:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now