மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 December, 2021 5:29 PM IST
Bulletproof mobile cover

குண்டு துளைக்காத உடை, குண்டு துளைக்காத கார் என கேள்விப்பட்டிருப்போம். இப்போது பிரபல கேவியர் நிறுவனம், ஆப்பிள் போனுக்கான குண்டு துளைக்காத கவரை தயாரித்துள்ளது.

ஐபோன், பிளேஸ்டேஷன் போன்ற மின்னணு சாதனங்களை மிகுந்த ஆடம்பர பொருளாக மாற்றும் வகையில், பல்வேறு பொருட்களை தயாரித்து வரும் நிறுவனம் கேவியர். இந்நிறுவனம், ஐபோன், பிளேஸ்டேஷன் போன்றவற்றுக்கு தங்கத்தில் ஆன கவர்களை தயாரித்து வழங்குவது வழக்கம்.

குண்டு துளைக்காத கவர் (Bulletproof cover)

தற்போது இந்நிறுவனம், 'ஐபோன் 13 புரோ' மற்றும் 'ஐபோன் 13 புரோ மேக்ஸ்' ஆகிய போன்களுக்காக குண்டு துளைக்காத கவர்களை தயாரித்து உள்ளது. துப்பாக்கியால் சுட்டாலும் குண்டை இந்த போன் கவர் தடுத்துவிடும்.

இது குறித்த விளக்க வீடியோ ஒன்றையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. துப்பாக்கியால் சுடும்போது குண்டை போன் கவர் தாங்கிக் கொள்கிறது. இருப்பினும் போன் நொறுங்கி விடுகிறது. ஆனாலும், உயிர் காக்கப்பட்டுவிடும்.

விலை (Price)

இரு குண்டுகளை இந்த கவர் தாங்கும் என கூறப்பட்டுள்ளது. சரி, இந்த கவரின் விலை எவ்வளவு என்கிறீர்களா? எதற்கும் நெஞ்சை பிடித்துக்கொண்டு மேலே படியுங்கள். ஒருவேளை நீங்கள் குண்டு துளைப்பதை விட அதிக வலியை உணரக்கூடும். ஐபோன் 13 புரோ கவருடன் சேர்த்து 4.85 லட்சம் ரூபாய் ஆகிறது. ஐபோன் 13 புரோ மேக்ஸ் போனுடனான கவரின் விலை 6.08 லட்சம் ரூபாய்.

மேலும் படிக்க

1 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்: புதிய திட்டம் துவக்கம்!

ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்: ரிசர்வ் வங்கி!

English Summary: Bulletproof mobile cover: New introduction!
Published on: 28 December 2021, 05:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now