Others

Wednesday, 13 October 2021 11:36 AM , by: Aruljothe Alagar

Business Ideas: Jan Ashadi Yojana! Government funds to set up a people's pharmacy!

வணிக யோசனைகள்:

மார்ச் 2024 க்குள் நாடு முழுவதும் பிரதான் மந்திரி ஜன் ஆஷாதி மையங்களின் அதாவது மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆஷாதி மையம்) எண்ணிக்கையை 10,000 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 10, 2021 க்குள் நாட்டில் ஜன் ஆஷாதி மையங்களின் எண்ணிக்கை 8,366 ஆக உயர்ந்துள்ளதாக ரசாயனம் மற்றும் உர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் நாட்டின் 736 மாவட்டங்களில் பரவியுள்ளன.

சாமானிய மக்களுக்கு மருந்துகளுக்காக செலவிடப்படும் பணச் சுமை குறைக்கப்பட வேண்டும்.

இதற்காக, மக்களுக்கு பொதுவான மருந்துகளை எளிதாக வழங்குவதற்காக ஜன் ஆஷாதி மையங்களைத் திறக்க அரசு மக்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்கும் திட்டம் இருந்தால், இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம்.

மருந்துகள் 90 சதவீதம் மலிவாக கிடைக்கின்றன

மார்ச் 2024 க்குள் பிரதான் மந்திரி ஜன் ஆஷாதி மையங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மையங்களில் 1,451 மருந்துகள் மற்றும் 240 அறுவை சிகிச்சை பொருட்கள் அடங்கும். அந்த அறிக்கையின்படி, பிரதான் மந்திரி ஜன் ஆஷாதி பரியோஜனாவின் கீழ் கிடைக்கும் மருந்துகளின் விலைகள் பிராண்டட் மருந்துகளை விட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக உள்ளது.

அக்டோபர் 10, 2021 வரை நடப்பு நிதியாண்டில், BPPI (Bureau of Pharma PSU of India) 431.65 கோடி மதிப்புள்ள மருந்துகளை விற்றுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் குடிமக்களுக்கு ரூ. 2,500 கோடி சேமித்துள்ளது.

ஜன் ஆஷாதி மையத்தை எப்படி திறப்பது

ஜன் ஆஷாதி மையத்தை (மக்கள் மருந்தகம்) தொடங்க அரசாங்கத்தால் ஒரு பொன்னான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த மையத்தை திறப்பதன் மூலம் சாமானியர்களும் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.

இதனுடன், சுகாதாரத் துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இந்த மருந்து மையம் பொதுவான மருந்துகளை விற்கிறது மற்றும் இந்த மையத்தைத் திறக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பாரதீய ஜன் ஆஷாதி திட்டத்தின் கீழ், அரசாங்கம் 2.50 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் எளிதாக ஒரு மருந்தகத்தைத் திறக்க முடியும். மொத்தமாக 2.50 லட்சம் ரூபாயை அரசாங்கம் ஒரே நேரத்தில் தருவதில்லை என்பதை இங்கே தெரிந்து கொள்வது அவசியம், ஆனால் இந்தத் தொகை தவணை முறையில்கொடுக்கப்படுகிறது. இந்த பணம் ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது

ஜன் ஆஷாதி மையத்தை யார் திறக்க முடியும்

அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு ஜன் ஆஷாதி மையத்தை திறப்பதற்கான முதல் நிபந்தனை என்னவென்றால், ஒரு நபர் ஜன் ஆஷாதி மையத்தைத் திறக்க விரும்பினால், அவர் டி பார்ம் அல்லது பி பார்ம்வில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜன் ஆஷாதி மையத்தை திறப்பதன் மூலம் அவர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க விரும்பினாலும், அவரும் இந்த பட்டம் பெற்றிருப்பது அவசியம். அதாவது, விண்ணப்பிக்கும் போது சான்றாக அவர்கள் பெற்ற பட்டத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

PMJAY இன் கீழ் ஒரு மருந்து மையத்தைத் திறக்க எந்தவொரு நபரும் அல்லது வணிகம், மருத்துவமனை, NGO, மருந்தாளர், மருத்துவர் மற்றும் மருத்துவ பயிற்சியாளர் விண்ணப்பிக்கலாம்.

PMJAY இன் கீழ், SC, ST மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ மையங்கள் திறக்க 50,000 ரூபாய் வரை முன்கூட்டியே தொகை வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆஷாதி மையம் என்ற பெயரில் ஒரு மருந்து கடை திறந்து கொள்ளலாம்.

எப்படி சம்பாதிக்க வேண்டும்

ஜன் ஆஷாதி மையத்திற்கு 12 மாத விற்பனையில் 10 சதவீத கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கும். இருப்பினும், இந்தத் தொகை மாதத்திற்கு அதிகபட்சம் 10,000 ரூபாய். வடகிழக்கு மாநிலங்கள், நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகள், பழங்குடியினர் பகுதிகளில், இந்த ஊக்கத்தொகை 15 சதவீதம் வரை இருக்கும்.

இந்த ஆவணங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்

நீங்களே விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஆதார் மற்றும் பான் கார்டு தேவைப்படும். ஒரு அரசு சாரா நிறுவனம், மருந்தாளுநர், மருத்துவர் மற்றும் மருத்துவ பயிற்சியாளர் ஜன் ஆஷாதி மையத்தைத் திறக்க விண்ணப்பித்தால், அவர் விண்ணப்பிக்கும் போது ஆதார், பான், நிறுவனச் சான்றிதழ் மற்றும் அதன் பதிவுச் சான்றிதழை அளிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு மருந்து மையத்தைத் திறக்க, குறைந்தபட்சம் 120 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க...

நாட்டு கோழிகளுக்கு தோன்றும் அனைத்து நோய்களுக்கும் ஆயுர்வேதம் சொல்லும் அருமருந்து

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)