Others

Thursday, 16 December 2021 06:44 PM , by: R. Balakrishnan

E-Sevai Center

தமிழகத்தில் இயங்கி வரும், மாநில 'இ-சேவை' (E-sevai) மையங்களில், மத்திய அரசின் சேவைகளையும் இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா (Digital India)

மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து அரசுத்துறைகளும் நவீனமயமாகி வருகின்றன. பொதுமக்கள், 'இ-சேவை' மையங்களில், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து, கட்டண அடிப்படையில், சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர்.

தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்கள் - 4,370; வறுமை ஒழிப்பு சங்கம் - 4,269; கிராம தொழில் முனைவோர் - 2,334; தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் - 661 உட்பட, 12 ஆயிரத்து, 716 'இ-சேவை' மையங்கள் இயங்கி வருகின்றன.

இணைப்பு (Linked)

இவற்றில், மாநில அரசு தொடர்பான, 110 வகையான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், மத்திய அரசின் சேவைகள், இவற்றில் கிடைப்பதில்லை. பொது சேவை மையங்கள் இயங்கும் முகவரி தொடர்பான விவரமும் மக்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், 'இ-சேவை' மையங்களில், மத்திய அரசின் சேவைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை, பொது சேவை மைய மாவட்ட மேலாளர்கள் துவக்கியுள்ளனர்.

மேலும் படிக்க

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு தேசிய அளவில் 4-ம் இடம்!

வேளாண் போராட்டம் விவசாயிகளுக்கு சிறந்த பயிற்சி - விவசாய சங்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)