மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 August, 2022 2:27 PM IST
EPFO customers

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. அதாவது EPFO நிறுவனத்தின் கீழ் PF கணக்கு தொடங்கப்பட வேண்டும். இந்நிறுவனம் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக EPFO தொடர்பாக பல்வேறு வகையான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தனிப்பட்ட விவரங்கள் (Personal Details)

EPFO வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது, EPFO வாடிக்கையாளர்களிடம் சமூக வலைதளம் அல்லது தொலைபேசி மூலமாக தெரியாத நபர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். அதன் பின்பு தங்களின் இபிஎஃப் எண், வங்கி எண், ஓடிபி உள்ளிட்ட விவரங்களை கேட்ப்பார்கள். ஆனால் நீங்கள் யாரிடமும் உங்களின் தனிப்பட்ட விவரங்களை பகிர கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்கு வழங்கப்படும் சில EPFO சேவைகளை DigiLocker மூலம் அணுக முடியும் என்பதையும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக தங்களுக்கு பணத்தை அனுப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவீர்கள்.

ஆனால் எந்தவொரு சேவைகளுக்காகவும் EPFO நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்படி EPFO நிறுவனம் சார்பாக ஒரு நாளும் கூறப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

உங்களிடம் தங்கப் பத்திரம் இருக்கா? வங்கியில் ஈஸியா கடன் வாங்கலாம்!

ஓய்வு பெற்ற பிறகு தேவைப்படும் பணத்தை கணக்கிடுவது எப்படி?

English Summary: Central government warning to EPFO ​​customers!
Published on: 24 August 2022, 02:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now