நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 March, 2023 10:05 AM IST
Insurance

இனி அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களும், மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் மன நோய்களுக்கும், எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய காப்பீட்டை கட்டாயமாக வழங்க வேண்டும். இதுகுறித்த உத்தரவை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI வெளியிட்டுள்ளது.

காப்பீடு (Insurance)

சில மாதங்களுக்கு முன்பே அனைத்து மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தங்களது இன்சூரன்ஸ் கவரேஜில் மனநலம் சார்ந்த நோய்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என IRDAI உத்தரவிட்டிருந்தது. ஆனால், வெகு சில நிறுவனங்களே மன நோய்களுக்கு காப்பீடு வழங்க தொடங்கியுள்ளன. இந்த சூழலில், பதிவுச் சான்றிதழ் பெற்ற அனைத்து பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும், தனி மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் கட்டாயமாக மனநோய்களுக்கும், எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்க வேண்டும் என IRDAI உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், மேற்கூறியபடி மன நோய்களுக்கும், எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இன்சூரன்ஸ் கவரேஜ் சார்ந்த திட்டங்களை அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, மருத்துவ காப்பீடு பாலிசிகளில் மன நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இன்சூரன்ஸ் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விரும்பினால் கூடுதல் வசதிகளை வழங்கலாமே தவிர, மேற்கூறிய சேவைகளை குறைக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மேற்கூறிய இன்சூரன்ஸ் வசதிகள் நிச்சயமாக வழங்கப்படும் என அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கொள்கை உருவாக்கி அதற்கு அந்தந்த நிறுவனங்களின் நிர்வாகக் குழு (Board) ஒப்புதல் அளித்து வெளியிட வேண்டும் என IRDAI உத்தரவிட்டுள்ளது. இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான விலையை IRDAI (மருத்துவக் காப்பீடு) விதிமுறைகள் 2016 அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் எனவும் IRDAI வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

100 நாள் வேலைத் திட்டத்தில் இணைய யாருக்கெல்லாம் உரிமை உண்டு? அரசின் புதிய அறிவிப்பு!

PM Kisan: 2000 ரூபாய் வந்துடுச்சா? இல்லையென்றால் உடனே இதைப் பண்ணுங்க!

English Summary: Change in Insurance Terms: Policyholders Must Know!
Published on: 02 March 2023, 08:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now