Others

Thursday, 30 March 2023 02:30 PM , by: R. Balakrishnan

Postal Savings

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய 2023-24ஆம் நிதியாண்டு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று முக்கிய விதிமுறைகள் மாற இருக்கின்றன. இந்த விதிமுறை மாற்றம் குறித்தும், அதனால் யாருக்கு பயன் என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக மாத வருமான திட்டம்

அஞ்சலக மாத வருமான திட்டத்துக்கான (Post office Monthly Income scheme) அதிகபட்ச டெபாசி வரம்பு 4 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டு கணக்குகளுக்கு (Joint account) அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சீனியர் சிட்டிசன் திட்டம்

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கு (Senior citizen savings scheme) அதிகபட்ச டெபாசிட் வரம்பு 15 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சீனியர் சிட்டிசன்கள் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து பயன்பெறலாம்.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்

2023 மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (Mahila Samman Savings certificate) என்ற புதிய சிறு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு குறுகிய கால சேமிப்பு திட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இத்திட்டம் அமலில் இருக்கும். பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் 7.5% வட்டி கிடைக்கும்.

மேலும் படிக்க

ஏப்ரல் முதல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு: வெளியான நற்செய்தி!

இந்தியாவின் முதல் குளோனிங் பசுங்கன்று கங்கா: தேசிய பால்வளத்துறை சாதனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)