மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 August, 2022 3:46 PM IST
Chennai: Closing ceremony of 44th International Chess Olympiad

சர்வதேச அளவில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழா இன்று 09-08-2022 அன்று நிறைவு பெறுகிறது. இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28, 2022 அன்று தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

தொடக்க நாள் அன்று, இந்தியாவின் வெற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் குறிப்பாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடன நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து லிடின் நாதஸ்வராத்தின் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. தொடக்க நாள் முதல் ஆனல் பறக்க ஆரம்பிக்கப்பட்ட இவ்விளையாட்டு விழா, நிறைவுக்க வருகிறது.

இன்று மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்கப் போட்டியின் பத்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்கள், விருந்தினர்களுக்கும் தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் கீழடி தொல்லியல் ஆய்வு, திருக்குறள் ஆகியவற்றின் ஆங்கில, பிரேஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழியாக்க நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

44வது சர்வதேச சதுரங்கப் போட்டி "நிறைவு விழா" இன்று மாலை 6 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சுற்றுச் சுழல் - காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் முன்னிலையில் நடைபெறும்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இந்திய அணி ஆலோசகர், டாக்டர் சஞ்சய் கபூர் அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு மற்றும் பாரத்சிங் சௌஹான், 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி இயக்குநர் அவர்களும் கலந்துக்கொள்வார்கள்.

மேலும் படிக்க:

எலுமிச்சை ஜூஸின் பக்க விளைவுகள்!

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் ஆபத்து?

English Summary: Chennai: Closing ceremony of 44th International Chess Olympiad
Published on: 09 August 2022, 03:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now