மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 December, 2022 3:11 PM IST
Technology Help Reduce Food Insecurity

உணவு பற்றாக்குறையை போக்குவதற்கு கிளைமேட் ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் தொழில்நுட்பம் நிச்சியம் உதவும் என்று டாபோலி கொங்கன் கிரிஷி வித்யாபீத் துணைவேந்தர் பாலாசாஹேப் சாவந்த் கூறினார்.

அன்றாட வாழ்வில் மக்களின் உணவு பற்றாக்குறையை போக்குவதற்காக வேளாண் தொழில்நுட்பங்கள் உருவெடுத்து கொண்டுதான் உள்ளன இருப்பினும் அனைத்தும் வெற்றிபெறுவதில்லை ஏதோ ஒரு தடை வந்து கொண்டு தான் இருக்கிறது, பல வேளாண் தொழில்நுட்ப கலைஞர்கள் பல்வேறு விதமான அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம் தான் " கிளைமேட் ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் " தொழில்நுட்பம்.

புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை பயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன, மேலும் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய நாம் 'கிளைமேட்-ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் ' அவசரமாக மாற வேண்டிய அவசியம் உள்ளது என்று டாபோலி கொங்கன் கிரிஷி வித்யாபீத் துணைவேந்தர் பாலாசாஹேப் சாவந்த் கூறினார்.

நஷ்டத்தைத் தவிர்க்க, மாறிவரும் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தது போல மா, நெல் மற்றும் இதர பயிர் வகைகளைப் பயிரிட வேண்டும் என்றார். இந்திய விவசாயிகள் தங்களின் கடின உழைப்பால், வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள திராட்சை மற்றும் ஆப்பிள் பயிர்களில் நல்ல விளைச்சலைப் பெற முடிந்தது என்று டோடமார்க் லக்ஷ்மிபாய் ஹல்பே கல்லூரியில் பொருளாதாரத் துறை மற்றும் இந்திய சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சாவந்த் கூறினார்.

“கொங்கனில் உள்ள தோட்டக்கலை வல்லுநர்கள் மாறிவரும் வானிலை காரணமாக அல்போன்சா மா மற்றும் பிற பயிர்களின் விளைச்சலுக்கு இழப்பை எதிர்கொள்கின்றனர். காலநிலை விழிப்புணர்வு கொண்ட மாம்பழ வகைகளை நாம் உருவாக்க வேண்டும். காலநிலை மற்றும் புவி வெப்பமடைதலின் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் காரணமாக விளைச்சல் மட்டுமல்ல, பயிர்களின் ஊட்டச்சத்து மதிப்பும் மோசமாகப் பாதிக்கப்படும். முடிந்தவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நியாயமான முறையில் பயன்படுத்துவதன் மூலம், தேவை மற்றும் விநியோகத்தின் சமநிலையை நாம் பராமரிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.    

கொங்கன் கிருஷி வித்யாபீடத்தின் ஆராய்ச்சி இயக்குனர் சஞ்சய் பாவே, பருவநிலை மாற்றம் மற்றும் விவசாயிகளால் எதிர்பார்க்கப்படும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சமாளிக்க முடியும் என்பது பற்றிய பல்வேறு உண்மைகளை எடுத்துரைத்தார்.

லக்ஷ்மிபாய் ஹல்பே கல்லூரியின் முதல்வர் சுபாஷ் சாவந்த் இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்தார். தொடக்க அமர்வுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கோவா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க:

காலநிலை மாற்றம் உணவு விநியோகத்தை குறைப்பதால் உலகளாவிய வறுமை அதிகரிக்கும்: ஐ.நா சபை

விவசாயிகளுக்கு பயனளிக்கும் 'உழவன் செயலி' குறித்து அறிவோமா!!!

English Summary: "Climate Smart Agriculture Is What We Need Now" - Can This Technology Help Reduce Food Insecurity
Published on: 27 December 2022, 02:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now