Others

Sunday, 10 April 2022 02:51 PM , by: R. Balakrishnan

Complaint Camp to resolve PF customer grievances!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மக்கள் சந்திக்கும் குறைகளைத் தீர்க்க சென்னை தெற்கு மண்டல பிஎஃப் அலுவலகம் வரும் ஏப்ரல் 11-ம் தேதி திங்கள்கிழமை குறைதீர்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை தெற்கு மண்டல ஆணையர் பி.ஹன்ஸ்சிங் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

குறைதீர்ப்பு முகாம் (Complaint camp)

ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி வருங்கால வைப்பு நிதி சட்டப்படி சென்னை தெற்கு மண்டல அலுவலகத்தில் பிஎஃப் உறுப்பினர்களின் குறைகள் மற்றும் புகார்களைக் கேட்டு அவற்றுக்கு விரைவாகத் தீர்வுகளைக் காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நிதி ஆப்கே நிகத் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்தக் குறைதீர்ப்பு முகாம் இந்த மாதம் 10-ம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் வருவதால் 11-ம் தேதி திங்கள்கிழமை அன்று நடத்தப்படும்.

அன்றைய தினம் சென்னை தெற்கு மண்டல அலுவலகத்துக்கு பி.எஃப் உறுப்பினர்கள் வந்து தங்களுடைய குறைகளுக்குத் தீர்வு காணலாம். பி.எஃப் உறுப்பினர்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் வருவது முக்கியம் என்று கூறினார்.

மேலும் படிக்க

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை: மத்திய அரசு!

PF உறுப்பினர்களே: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)