மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 January, 2022 9:26 AM IST
Credit: Dinamalar

கொரோனா ஊரடங்கு காலத்தில், தன் வீட்டின் முன் குவிந்த ரசிகர்களை, முக கவசம் அணியாமல் ரஜினிகாந்த் சந்தித்து, பொங்கல் வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் (Super Star)

தன்னிகரில்லா நடிப்பு, தனக்கென தனி style போன்றவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் நடிகர் ரஜினிகாந்த். இதன் மூலம் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

பண்டிகைக் காலங்கள் (Festive seasons)

ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும், தன் புதிய படம் வெளிவரும்போதும், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்து, வாழ்த்துக் கூறுவது வழக்கம்.

குவிந்த கூட்டம்

அதேபோன்று, பொங்கல் திருநாளில், நடிகர் ரஜினி ரசிகர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதால், போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்தனர்.

சமூக இடைவெளி இல்லை

அவர்களில் பலர் சமூக இடைவெளி எதுவும் இல்லாமல், கூட்டமாக ரஜினி வீட்டு வாசலில் காத்திருந்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், வீட்டு வளாகத்தின் நுழைவு கேட்டின் உள் பக்கமாக சிறிய பெஞ்சில் ஏறி நின்றவாறு, ரசிகர்களைச் சந்தித்து, பொங்கல் வாழ்த்துக் கூறினார்.

முகக்கவசம் மிஸ்ஸிங்

அப்போது அவர், கொரோனா விதிகளின் படி முக கவசம் அணிந்திருக்கவில்லை. ரசிகர்கள் பலர் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு, புத்தகங்களையும், காகிதங்களையும் நீட்டினர். அவர்களில் சிலரிடம் புத்தகங்களை வாங்கிக் கொண்டார்.

பின், கையெடுத்து கும்பிட்டும், ரசிகர்களை பார்த்து கையசைத்தும் காட்டி விட்டு, பெஞ்சில் இருந்து கீழே இறங்கி, வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

ரஜினி டுவிட்டர்

இதைத் தொடர்ந்து, தன் டுவிட்டர் பக்கத்தில், நடிகர் ரஜினி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகுது.
இதில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள, எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

English Summary: Controversial Rajini congratulates Pongal
Published on: 15 January 2022, 09:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now