Others

Tuesday, 16 August 2022 10:17 PM , by: Elavarse Sivakumar

எதிர்காலத்திற்கானச் சேமிக்க விரும்புபவராக இருந்தால், இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள். ஏனெனில், இந்த கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.50 தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.35 லட்சம் வரை வருமானத்தைப் பெறலாம்.

கிராமப்புறங்களில் அஞ்சலகங்கள் மக்களுக்கு நம்பகமான சேமிப்பு இடமாக செயல்பட்டு வருகின்றது. அஞ்சலகம் வாயிலாக அரசும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அத்தகைய அஞ்சலகத் திட்டங்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது கிராம் சுரக்ஷா யோஜ்னா திட்டம்.

இது அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளதால் பலரும் இதில் தைரியமாக முதலீடு செய்கின்றனர். இது, பாலிசி எடுத்து ஐந்தாண்டுகளின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசிக்கு மாற்றுவதற்கான கூடுதல் அம்சத்துடன் கூடிய முழு ஆயுள் காப்பீட்டுக் கொள்கையாகும்.

வயது

இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது 19 முதல் 55 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரிமியம்

நீங்கள் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 10,000 முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை பாலிசி எடுக்கலாம். பாலிசி எடுக்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இந்த திட்டத்தில் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

வசதிகள்

இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் சரண்டர் செய்தால் நீங்கள் போனஸ் பெற தகுதியற்றவர், பாலிசி சரண்டர் செய்யப்பட்டால் , குறைக்கப்பட்ட தொகைக்கு விகிதாசார போனஸ் வழங்கப்படும்.

ரூ.50

கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.50 தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.35 லட்சம் வரை வருமானத்தைப் பெறலாம். 

ரூ.34.60 லட்சம்

ஒவ்வொரு மாதமும் பாலிசிதாரர் பாலிசியின் கீழ் ரூ.1,515 முதலீடு செய்தால், ஒவ்வொரு நாளும் தோராயமாக ரூ.50 செலுத்தும்பொழுது பாலிசி மதிப்பு ரூ.10 லட்சமாக இருந்தால், அதன் முதிர்வுக்குப் பிறகு அந்த நபருக்கு ரூ.34.60 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் 55 வருட காலத்திற்கு ரூ.31,60,000 மாஸ்டரும் 58 ஆண்டுகளுக்கு ரூ.33,40,000 மற்றும் 60 வருட காலக் காலத்திற்கு ரூ.34.60 லட்சம் பெறுவார்.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)