Others

Monday, 01 November 2021 10:52 AM , by: T. Vigneshwaran

Cheapest Honda Cars

இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் பல்வேறு பிரிவுகளில் பல வகையான வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு காரும் அதன் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில், பலர் ஹேட்ச்பேக் காரை மிகவும் விரும்புகிறார்கள்.  வெறும் 2.78 லட்சம் விலையில் மட்டுமே கிடைக்கும் காரைப் பற்றி இன்று உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இந்த கார் அதிகபட்சமாக ஐந்து பேர் அமரக்கூடியது. மேலும் இது பல நல்ல அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த ஹோண்டா காரின் பெயர் Honda Brio I VTEC, இந்த காரின் விலை ரூ.4.78 லட்சம். ஆனால் நாம் பேசும் கார் Cars24 என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கார் செகண்ட் ஹேண்ட் செக்மென்ட் கார் ஆகும். இந்த கார் வெள்ளி நிறத்தில் வருகிறது. எளிதான தவணை தவிர, பூஜ்ஜிய முன்பணம் செலுத்தி வாங்கலாம். இந்த ஒப்பந்தத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வதற்கு முன், இந்த காரின் விவரக்குறிப்பைத் தெரிந்து கொள்வோம்.

மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வரும் ஹோண்டா பிரியோவில் 1198 சிசி இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. Car Dekho இணையதளத்தின்படி, இந்த கார் 18.5 kmpl மைலேஜ் வழங்கும். பெட்ரோலில் இயங்கும் இந்த கார் 4 சிலிண்டர்களுடன் வருகிறது. இந்த எஞ்சின் 4500 ஆர்பிஎம்மில் 109 என்எம் டார்க்கை உருவாக்க முடியும். 6000rpm இல் 86.8bhp ஆற்றலை உருவாக்க முடியும்.

இந்த ஹோண்டா காரில் 35 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. மேலும், இந்த காருக்கு அக்டோபர் 2022 வரை காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 175 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இது தானியங்கி காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பையும் கொண்டுள்ளது.

கார்ஸ்24 என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த கார், 2012ம் ஆண்டு மாடல், 27 ஆயிரம் கிலோமீட்டர்கள் ஓடியது. இந்த கார் டெல்லியின் டிஎல்-13 ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார் முதல் உரிமையாளர் கொண்ட கார். எந்த ஒரு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் முன், அதைப் பற்றிய தகவல்களை கவனமாகப் படியுங்கள்.

மேலும் படிக்க:

குறைந்த விலையில் பைக்குகள்! தீபாவளியன்று நிறுவனங்களின் பம்பர் தள்ளுபடி!

தீபாவளி கொண்டாட்டம்: 30,000 ரூபாய்க்கு சிறந்த மைலேஜ் ஹீரோ ஸ்கூட்டர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)