மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 April, 2021 6:18 PM IST
Credit : DNA India

பெரும்பாலான மக்கள் தங்களின் எதிர்காலத்திற்காக சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு (Invest) செய்ய விரும்புகின்றனர். அதே நேரத்தில் அதன் மூலம் குறிப்பிட்ட வருவாயையும் பெற முடியும். ஆனால் சில நேரங்களில் தவறான இடத்தில் முதலீடு செய்வதால், அது லாபம் தருவதற்கு பதிலாக பல சிக்கல்களை உருவாக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சரியான இடத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வருடாந்திர வைப்பு திட்டம்

ஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகையில் (Fixed Deposit -FD) இருந்து பொது வருங்கால வைப்பு நிதிக்கு (Public Provident Fund – PPF) என பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்டம் (SBI Annuity Deposit Scheme) மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10000 ரூபாய் வரை பெறலாம்

சிறந்த முதலீட்டு திட்டம்

எஸ்பிஐயின் (SBI) இந்த திட்டத்தில் 36, 60, 84 அல்லது 120 மாத காலத்திற்கு முதலீடு செய்யலாம். இதில், முதலீட்டின் வட்டி விகிதம் ஒரே மாதிரியாக இருக்கும். நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு டெபாசிட் செய்தால், 5 வருட நிலையான வைப்புத்தொகைக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தின் படி, உங்களுக்கு வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Credit : Deccan Herald

மாதம் ரூ.10,000 வருமானம்

முதலீட்டாளர் மாதம் ரூ.10,000 வருமானம் பெற விரும்பினால், அவர் ரூ.5,07,964 டெபாசிட் (Deposit) செய்ய வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட தொகையில், அவர் 7 சதவீத வட்டி விகிதத்தில் வருமானம் பெறுவார். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 கிடைக்கும். எதிர்காலத்திற்காக வருமானத்தை அதிகரிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

விதிமுறைகள்

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்டிசம் ரூ.1000 இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதில் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. வருடாந்திர கட்டணத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வாடிக்கையாளர் டெபாசிட் செய்த தொகையில் வட்டி தொடங்குகிறது. இந்த திட்டங்கள் எதிர்காலத்திற்கு மிகச் சிறந்தவை, ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் சேர்ந்து இவ்வளவு பணத்தை திரட்ட முடியாது.

தொடர்ச்சியான வைப்பு (ஆர்.டி) திட்டங்கள்

பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் ஆர்.டி.க்களில் (RD) முதலீடு செய்வதன் மூலம் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகை சிறிய சேமிப்பு மூலம் ஆர்.டி.யில் டெபாசிட் செய்யப்படுகிறது.. மேலும் முதிர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தொகை வட்டியுடன் பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் ஆர்.டி திட்டம் மக்களால் அதிகம் விரும்பப்படும் திட்டமாக கருதப்படுகிறது..

மேலும் படிக்க

25 பைசா நாணயம் இருக்கா? நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்!

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்! தமிழக முதல்வர் வேண்டுகோள்!

English Summary: Do this to earn Rs.10,000 per month!
Published on: 29 April 2021, 06:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now