Others

Saturday, 30 April 2022 11:34 AM , by: R. Balakrishnan

Dog who lost his wallet

சில வேடிக்கையான விஷயங்கள் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தர வல்லது. அப்படி ஒரு சம்பவம் தான் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. ஆந்திராவில், வளர்ப்பு நாய் பணப்பையை வாயில் கவ்விக் கொண்டு ஓடி, அதை தொலைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பணப்பை (Money Bag)

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள நாச்சினபள்ளி கிராமத்தில், ஆடு மேய்த்து வருபவர் செராலா. இவர், இரு நாட்களுக்கு முன் சந்தைக்கு சென்று ஆடுகளை விற்று, 1.50 லட்சம் ரூபாயுடன் வீட்டிற்கு வந்தார். பணப்பையை கட்டிலில் வைத்து விட்டு குளிக்க சென்றார்.

அப்போது, அங்கு வந்த அவரின் வளர்ப்பு நாய், கட்டிலில் இருந்த பணப்பையை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது. குளித்து விட்டு திரும்பிய செராலா, கட்டிலில் வைத்த பணப்பையை காணாமல் பதறி தேடினார்.

அப்போது அக்கம்பக்கத்தினர், அவருடைய நாய் ஒரு பையை கவ்விக் கொண்டு ஓடியதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் பல இடங்களில் தேடியும் பணப்பை கிடைக்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆடு மேய்த்து தனது வாழ்வை நடத்தி வரும் இவருக்கு, இது பெரும் சோகமான நிகழ்வு தான். விரைவில் இவரது பணம், திரும்ப கிடைக்க வேண்டும், அப்போது தான், அவர் நிம்மதி அடைவார்.

மேலும் படிக்க

இணையத்தில் வைரல்: லாரியில் தொற்றிக் கொண்ட சுங்கச் சாவடி ஊழியர்!

அதிர்ச்சி சம்பவம்: மகளை நரபலி கொடுக்கத் மந்திரவாதியுடன் கூட்டு சேர்ந்த தந்தை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)