நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 August, 2022 7:31 AM IST

நடுத்தர குடும்பத்தினரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க, மத்திய அரசும் நிதியுதவி செய்து உதவுகிறது. இதனைச் செயல்படுத்திவரும், பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சொந்த வீடு என்பது நம்மில் பலரது கனவாக இருக்கும். ஏன் மிகப்பெரிய இலக்காகக்கூடக் கருதி, அதனை அடைய அயராது உழைத்துக்கொண்டிருப்பர். அவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், மத்திய அரசு நிதியதவி அளித்துவருகிறது. இந்தத் திட்டம்தான் பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம்.

 2024ஆம் ஆண்டு வரை

இந்நிலையில், பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் (Pradhan Mantri Awas Yojana - Urban) திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை 2024ஆம் ஆண்டு வரை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒப்புதல்

கடந்த 2022 மார்ச் 31ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டிய 122.69 லட்சம் வீடுகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

100 லட்சம் வீடுகள்

2017ஆம் ஆண்டில் பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் முதலில் 100 லட்சம் வீடுகளை கட்டி முடிப்பதற்காக திட்டமிடப்பட்டது. திட்டமிடப்பட்டதை விட கூடுதல் வீடுகளுக்கு தேவை இருந்தது. ஆனால் திட்டமிட்டதை விட அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இதுவரை சுமார் 62 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. தற்போது 102 லட்சம் வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கூடுதலாக 40 லட்சம் வீடுகளுக்கு தேவை இருப்பதால் மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேச அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் பிரதமர் வீட்டு வசதி திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

ரூ1.20 லட்சம்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் ரூ.1.20 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. திட்டத்தை அமல்படுத்துவது, பயனாளிகளை தேர்வு செய்வது ஆகியவை மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் பணியாகும்.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: Extension of Prime Minister's Housing Scheme till 2024- Atikhu Yoga!
Published on: 11 August 2022, 10:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now