Others

Friday, 16 April 2021 02:17 PM , by: KJ Staff

Credit : Samayam Tamil

ஒவ்வொரு மாதமும் ரூ.30,000 - ரூ.40,000 சம்பளம் வாங்கினால் போதுமா? ஓய்வுக்குப் பின்னர் இதிலுள்ள சேமிப்புப் பணத்தை வைத்து காலத்தை ஓட்ட முடியாது. ஓய்வு காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை நிலையாக வந்துகொண்டிருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும்.

ஓய்வூதியம்:

உங்களுக்கு இப்போது 45 வயது என்று வைத்துக்கொள்வோம். உங்களிடம் ரூ.2 கோடி சேமிப்புப் பணம் (Savings Money) இருந்தால் அதை சரியான திட்டங்களில் முதலீடு செய்தால், உங்களது ஓய்வுக் காலத்தில் நிலையான வருமானத்தை ஈட்ட முடியும். உங்களது சேமிப்புக் கணக்கில் ரூ.80 லட்சம், பிஎஃப் (PF) கணக்கில் ரூ.80 லட்சம், பிபிஎஃப் (PPF) கணக்கில் ரூ.10 லட்சம், தேசிய பென்சன் திட்டத்தில் ரூ.3.5 லட்சம், பங்குச் சந்தையில் ரூ.30 லட்சம் இருப்பாக வைத்துக்கொள்வோம். உங்களது மாதாந்திர செலவு ரூ.2 லட்சமாக இருந்தால், இந்தத் தொகையை வைத்து இரண்டு ஆண்டுகள் கழித்து ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ.2 லட்சம் வருமானம் பெறுவதற்கு 12 சதவீத ரிட்டன் தரும் திட்டத்தில் பணத்தைப் போட வேண்டும்.

சரியான முதலீடு

தற்போதைய காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) போன்ற முதலீட்டுத் திட்டங்களில் 7 முதல் 8 சதவீத லாபமே கிடைக்கிறது. எனவே ரூ.2 கோடி முதலீட்டுப் பணத்தை வைத்து மாதம் ரூ.2 லட்சம் வருமானம் ஈட்டுவது கடினமான ஒன்றுதான். ஒன்று முதலீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும்; அல்லது பணிபுரியும் காலத்தை நீட்டித்து ஓய்வுக் காலத்தை அதிகரிக்க வேண்டும். ரிஸ்க் இல்லாத முதலீடாக இருந்தால் இதுதான் சரியான தேர்வாக இருக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வருமான வரியை சட்ட ரீதியாக எப்படி சேமிக்கலாம்? சூப்பர் டிப்ஸ்!

தமிழகத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி திருவிழா

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)