Others

Tuesday, 25 January 2022 08:51 PM , by: Elavarse Sivakumar

2 மாதக் குழந்தையை வைத்து ஒரு தந்தை சூதாடிய சம்பவம் மற்றவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சூதாட்டம், சீட்டாட்டம் என்றெல்லாம் வருணிக்கப்படும், சூது, ஆடுவோரின் வம்சத்தையே நாசமாக்கிவிடும். முன்பெல்லாம் மக்களிடையே மதுபோதை போல, சூதுபோதையே வியாபித்திருந்தது.

சூதாட்டத்திற்கு அடிமையாகும் சிலர், தங்கள் வெற்றிக்காக, எதையும் சூதில் வைக்கத் தவறமாட்டார்கள். அப்படிபொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
திருச்சியில் பிறந்து 2 மாதங்களே ஆன ஆண் குழந்தையை வைத்து சூதாடிய குழந்தையின் தந்தை, அக்குழந்தையை ரூ.80 ஆயிரத்திற்கு விற்றவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆண் குழந்தை (Baby Boy)

ருச்சி உறையூர் அருகே பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலாம், இவரது மனைவி கைருன்னிசா. இவர்களுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக அப்துல் சலாம் - கைருன்னிகா தம்பதிக்கு 5வதாக ஆண் குழந்தை பிறந்தது. சூதாட்ட பிரியரான அப்துல் சலாம், பிறந்து 2 மாதமான ஆண் குழந்தையை ஈடாக வைத்து, சூதாடி உள்ளார்.

தோல்வி (Failure)

சூதாட்டத்தில் தோல்வியடைந்ததால், குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தையைப் பெற்றுகொண்ட ஆரோக்கியராஜ், தொட்டியம் அருகே உள்ள கீழடி நிவாச நல்லூரை சேர்ந்த சந்திரகுமாரிடம் 80 ஆயிரம் ரூபாய்க்குக் குழந்தையை விற்பனை செய்துள்ளார்.

இது பற்றிய தகவல் அறிந்த உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வைத்து சூதாடிய அப்துல் சலாம், அதை விற்ற ஆரோக்கியராஜ், வாங்கிய சந்தன குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

மக்கள் எதிர்பார்ப்பு

எனவே சூதாட்டத்தை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் தற்போது இளைய தலைமுறையினரை அடிமையாக்கி பல ஆயிரங்களை இழக்கச் செய்யும், , ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யவும் அரசு முன்வருமா என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க...

குளிருக்காகப் பற்ற வைத்தஅடுப்பு- பறிபோன 5 உயிர்கள்!

கண்ணத்தில் அறைந்த மணமகன்- கல்யாணத்தை நிறுத்திய மணமகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)