நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 April, 2021 8:47 AM IST
Credit: You Tube

மீன்கள் இன விருத்திக்காக, ஏப்ரல் 15ம் தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடித்தடைக்காலம் நடைமுறைக்கு வருகிறது.

மீன்கள் இனப்பெருக்கம் (Fish breeding)

ஆழ்கடல் பகுதியில் வாழும் மீன்களின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்பிடிக்கத் தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

61 நாட்கள் தடை (61 days ban)

பொதுவாக ஏப்ரல் மாதம் 15ந் தேதி முதல் என் மாதம் 14ந் தேதி வரை இந்த மீன்பிடித் தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.

இவ்வாறு சுமார் 60 நாட்கள் மீன்பிடிக்காமல் இருப்பதன் மூலம் மீன் வளத்தை பெருக்க முடியும் என நம்பப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் இந்த மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற 15ம் தேதி முதல் தொடங்குகிறது. எனவே ஏப்ரல் 15ம் தேதி முதல் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரை திரும்ப உத்தரவு (Order to return to shore)

இதற்கு ஏதுவாக, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மீன்வளத்துறைக் கடிதம் (Fisheries letter)

இது தொடர்பாக விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குநர் வேலன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் கிழக்கு, மேற்கு கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன் இனப்பெருக்கக் காலமான ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

இதன்படி கிழக்கு கடற்கரை பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாகக் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

விலக்கு (Exclude)

அதேநேரத்தில், பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு மீன்பிடித் தடைக்காலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக 61நாட்களுக்கு கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வேண்டாம். கடலுக்குச் சென்றுள்ள படகுகள் அனைத்தும் வருகிற 14-ம் தேதி இரவுக்குள் மீன்பிடித் துறைமுகத்துக்குத் திரும்ப வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

குறைந்த முதலீட்டில் மெகா லாபம் தரும் மலர் வியாபாரம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் Computer Operator வேலைக்குப் பயிற்சி- பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!

English Summary: Fishing ban begins next week! Attention fishermen
Published on: 11 April 2021, 08:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now