மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 September, 2021 9:07 PM IST
Flexibility incident

உயிரிழந்த தாய்க்கு கோவில் கட்டி, சிலை அமைத்து வழிபாடு செய்து வரும், 13வது மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

சென்னை மணலி, ஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராமதாஸ், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர் மனைவி சிவகலை, 84. இந்த தம்பதிக்கு 10 மகன்கள், மூன்று மகள்கள் என, 13 பிள்ளைகள்.சிவகலையின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் கடந்த ஆண்டு அவரது, 12வது மகன் கோட்டீஸ்வரன், கொரோனாவால் இறந்தார். இந்த அதிர்ச்சியால், மூன்று நாட்களில் சிவகலையும் உயிரிழந்தார். நேற்று முன்தினம், சிவகலையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தாய்க்கு சிலை

சிவகலையின் 13வது மகனான சரவணன், மாமல்லபுரம் சிற்ப கலைஞர் ஒருவரிடம், தன் தாய்க்கு சிலை வடிக்க கோரினார். தன் வீட்டின் முன், தாயின் மார்பளவு சிலையை பிரதிஷ்டை செய்து, சரவணன் கோவில் எழுப்பினார். சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு படையல் வைக்கப்பட்டது. இதில் சிவகலையின் பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் என, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அன்னதானம்

மேலும், 501 பேருக்கு அன்னதானம்; 50 பேருக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி, சிவகலையின் குடும்பத்தினர் நெகிழ்ந்தனர்.

மேலும் படிக்க

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் டபுள் டக்கர் பாலம்!

CBSE பாடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யோகா பாட்டிக்கு அங்கீகாரம்!

English Summary: Flexibility incident: Son erects statue to deceased mother!
Published on: 30 September 2021, 08:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now