Others

Wednesday, 11 May 2022 10:44 AM , by: Elavarse Sivakumar

இந்த இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். கை நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் கடைசிக் காலத்தில் உங்களது வாழ்க்கையை நெருக்கடி இல்லாமல் நடத்த ஓய்வூதியம் போன்ற ஏதேனும் ஒரு நிதி ஆதாரம் தேவை. அந்த ஆதாரம்தான், உங்களை வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். அப்படியானால், அதற்கு இப்போதே நீங்கள் தயாராக வேண்டும். அதற்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது.

தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக அடல் பென்சன் யோஜனா என்ற பென்சன் திட்டத்தை மத்திய மோடி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் வரையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பென்சன் தருகிறது.

உங்களது 60 வயதுக்கு பின்னர் ஓய்வுக் காலத்தில் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெற வேண்டுமெனில் நீங்கள் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயதிலேயே இணைய வேண்டும். அதிலிருந்து 60 வயது வரையில் மாதம் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

 

எவ்வளவு கிடைக்கும்?

அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் ஒருவர் பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே துவங்க முடியும். 40 வயது வரையிலான மக்கள் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின் மூலம் மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 5000 ரூபாயும் பென்சன் கிடைக்கும்.

பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் போகும். இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய வங்கிகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, உங்களது வங்கிக் கணக்கு உள்ள வங்கியிலேயே நீங்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கான படிவங்கள் ஆன்லைனிலும், வங்கிக் கிளைகளிலும் கிடைக்கின்றன.

இத்திட்டத்தில் இணைவதற்கு உங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் எண் கட்டாயமாகும். அடல் பென்சன் யோஜனா திட்டத்துக்கு நீங்கள் பதிவுசெய்யும் வயதைப் பொறுத்து பங்களிக்க வேண்டிய தொகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

தாயுடன் குழந்தைக்கும் படுக்கை வசதி- ரயில்வேயின் புதிய முயற்சி!

பணிநேரத்தில் ஊழியர்கள் தூங்கலாம்- அனுமதி அளித்த நிறுவனம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)