Others

Thursday, 29 September 2022 09:58 PM , by: Elavarse Sivakumar

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4%அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இனி அவர்களது அகவிலைப்படி ரூ.27,000 வரை உயர வாய்ப்பு உருவாகியுள்ளது.

பண்டிகைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

50 லட்சம் பேர்

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 38% ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எவ்வளவு கிடைக்கும்

அடிப்படை ஊதியம்/ஓய்வூதியம் 25000 ரூபாய் என வைத்துக்கொண்டால், 38% விகிதத்தில் 8,500 ரூபாய் அகவிலைப்படி வழங்கப்படும். அதாவது அகவிலைப்படி 1000 ரூபாய் உயருகிறது.

அடிப்படை ஊதியம் 35,000 ரூபாய் 35000 ரூபாய் எனில், 13,300 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 1400 ரூபாய் உயருகிறது. அடிப்படை ஊதியம் 45000 ரூபாய் என்றால் 17100 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 1800 ரூபாய் உயருகிறது.

அடிப்படை ஊதியம் 55,000 ரூபாய் எனில் 20,900 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 2200 ரூபாய் உயருகிறது.அடிப்படை ஊதியம் 65,000 ரூபாய் எனில் 24,700 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 2600 ரூபாய் உயருகிறது.

மேலும் படிக்க...

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)