Others

Tuesday, 26 April 2022 10:53 AM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை 40 ஆயிரம் ரூபாயை நெருங்கியிருந்த நிலையில் திடீரென அதிரடியாகக் குறைந்துள்ளது. 2 நாட்களில், சவரனுக்கு 512 ரூபாய் குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.எனவே திருமணம் வைத்திருப்பவர்கள், உடனடியாக தங்க நகைக்கடைக்குச் சென்று ஆபரணத் தங்கத்தை வாங்கலாம்.

தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது.

குறிப்பாக ரஷியா- உக்ரைன் இடையே போர் தொடர்வதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் தங்கத்தின் பக்கமே இருக்கிறது. இதன் காரணமான முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கத்தின் விலையில் மாற்றம் நிலவி வருகிறது.

அதிரடி சரிவு

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,945க்கும், ஒரு சவரன் ரூ.39,560க்கும் விற்பனையானது.ஆனால் 2 நாட்களில் அதிரடியாகக் ரூ.512 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.39,048க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ.4,881க்கு விற்பனையாகியது.

திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், திருமணம் வைத்திருப்பவர்களுக்கு, தற்போது தங்கம் வாங்குவதற்கு உகந்த தருணமாக இருக்கும். எனவே சீதனமாகக் கொடுக்க வாங்க வேண்டிய நகைகளை இப்போதே வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

மனஅழுத்தத்தைக் குறைத்து, ஆயுளை அதிகரிக்கும் Brisk Walk!

உடல் பருமனைக் குறைக்க உதவும் மாம்பழம்- இத்தனை நன்மைகளா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)