Others

Friday, 11 November 2022 09:31 AM , by: Elavarse Sivakumar

இன்னும் சில ஆண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு உள்ளது. நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய அரசு ஊழியராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பழைய ஓய்வூதியத்திட்டம்

பழைய ஓய்வூதியத்திட்டம் என்பதுதான் இன்று பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. சில மாநிலங்களில், ஊழியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றன.

மத்திய அரசு

புத்தாண்டு வருவதற்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்த வாய்ப்பு உள்ளது. மத்திய மோடி அரசு 2024ஆம் ஆண்டுக்கு முன்னதாக இதை பரிசீலிக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்து கேட்பு

அரசு ஊழியர்களின் கோரிக்கையின் பேரில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்தத் துறையிலிருந்து செயல்படுத்தலாம் என்று கேட்கப்பட்டது.

மறுப்பு

முன்னதாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகப் பரவிய செய்தியை நிதித் துறை இணையமைச்சர் பகவத் கரத் மறுத்திருந்தார்.

யாருக்கு பலன்?

அரசு மறுத்தாலும், தேர்தலில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தும் என்று தெரிகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2003ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க...

இத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலேர்ட்!

ஆதாருக்கு 10 ஆண்டுகள்தான்- அச்சச்சோ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)