மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 July, 2021 2:30 PM IST
Government Order of Action! Incentive scheme for education for rural women

கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும்வகையில் அரசு ஊக்கத்தொகை அளித்து வருகிறது. கிராமப்புறப் பெண்கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை 10-ம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு மறுஆய்வு செய்து மாணவியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 500 ரூ, 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு, ஆண்டுக்கு தலா 1000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருகிறது. எனவே 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவியர்களின் விவரங்கள், பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை சேகரிக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகளுக்கு அவர்களின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கிலே இந்த ஊக்கத் தொகையை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.

மேலும் படிக்க:

PM-SYM-முதியோர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்!

English Summary: Government Order of Action! Incentive scheme for education for rural women
Published on: 29 July 2021, 02:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now