சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 30 March, 2022 11:42 AM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை எனப்படும் Gratuity, 30 நாட்களாக உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு பணிக்கொடை எனப்படும் Gratuity வழங்கப்படுவது வழக்கம். தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.இந்த Gratuity என்பது, ஊழியர்கள் கடைசியாக வாங்கும் சம்பளத்தைக் கருத்தில்கொண்டுக் கணக்கிடப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 15 நாட்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த Gratuity தொகையை 30 நாட்களாக உயர்த்த மத்திய அரசுத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அமைச்சர்  மறுப்பு

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறுகையில், அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என்றும், அதை 30 நாட்களாக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இத்தகவலை அவர் வெளியிட்டார். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை கிடைக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராமேஸ்வர் தெலி, சமூக பாதுகாப்பு சட்டம் - 2020இன் படி, ஒரு பணியாளரின் பணிநீக்கம், குறிப்பிட்ட காலத்திற்கு பணிநீக்கம் அல்லது இறப்பு அல்லது இயலாமை ஆகியவற்றின் காரணமாக பணிக்கொடை வழங்கப்படாமல் இருக்காது என்று தெரிவித்தார்.

பணிக்கொடை என்பது பணிக்கொடைச் சட்டம் 1972ன் கீழ் ஊழியர்கள் பெறும் பலன் ஆகும். ஒரு நிறுவனம் அல்லது முதலாளி தனது பணியாளரின் பணிக்கு ஈடாக தனது பணியாளருக்குச் செலுத்தும் சம்பளத்தின் ஒரு பகுதியை பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நிறுவனத்தின் சார்பாக பணிக்கொடை வழங்கப்படுகிறது. சேவை ஆண்டு x கடந்த மாத சம்பளம் x 15/26 என்ற சூத்திரத்தின் அடிப்படையில் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.

மேலும் படிக்க...

இல்லத்தரசிகளுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசம்- மாநில அரசு முடிவு!

அழகை என்றும் தக்கவைக்க- இவற்றுக்கு 'உ ஊ' சொல்லுங்க!

English Summary: Gratuity of Government Employees -Raised to 30 days?
Published on: 30 March 2022, 11:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now