Others

Tuesday, 02 May 2023 07:04 AM , by: R. Balakrishnan

4% DA Hike

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு நிதி ஆண்டிலும் இரண்டு முறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி ஒன்றாம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர இருப்பதாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி மாதத்தில் அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டில்(AICPI) சரிவு ஏற்பட்ட நிலையில் மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.

இதனால், அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் அதிகரிப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் நான்கு சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கிட்டத்தட்ட 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம் சாத்தியமே இல்லை: நிதியமைச்சர் எச்சரிக்கை!

பென்சன் வாங்குவோருக்கு நற்செய்தி: பென்சன் தொகையை உயர்த்திய மாநில அரசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)